Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 27 ஜனவரி, 2010

நிழலற்ற நகரத்தில் கால் பதித்த நாள்



o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

பூக்கள் உதிர்ந்த எனது நகரத்தில் கால்களை
இன்றுதான் இறக்கி வைத்திருக்கிறேன்.
ஆடித் திரிந்த எனது நகரத்தில்
அழிவுகளின் துயரடைந்த காலத்தின் பின்னர்
சற்று தூரம் வரை நடந்து திரிகிறேன்.
நான் விட்டுச்சென்றவைகளை தேடுகிறேன்.
சில சனங்கள் திரும்பியிருக்கிறார்கள்.
சாம்பலை அள்ளி கைகளில்
நிரப்பிக்கொண்டு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள்.

அந்த இரவு எனது நகரத்தில் இரண்டாவது முறையாக
மீண்டும் கால் பதித்திருந்தேன்.
முகங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.
முத்தமிட முடியாதபடி
குருதியும் சதையும் கலந்துகிடக்கிற மண்ணை
கொடூரமான ஓவியங்கள் வரையப்பட்ட
என் பூர்வீக நகரத்தின் வசீகரம் இழந்த சுவர்களை
தனியொருவனாய் வாசிக்கிறேன்.

சதிகளால் பலியிடப்பட்ட ஆன்மாக்கள்
அலைந்துகொண்டிருக்கின்றன என்றும்
நகரத்திற்கு மேல் அந்தரத்தில்
அவை துடித்துக்கொண்டிருக்கின்றன என்றும்
ஒரு முதாட்டி சொல்லிக்கொண்டு
சுவர்க்கரையில் கிடக்கிறாள்.
நகரம் இருளால் நிரம்பி வெறுமையுள் அமுங்கியிருந்தது.
பாதி மரங்களும் சிறிய துண்டு கட்டிடங்களும்
மீண்டும் துளிர்க்கும் என்று
அந்த மூதாட்டி இன்னும் சத்தமாக சொல்லிக்கொண்டிக்கிறாள்.

சாபங்களில் கிழிந்து போன நகரத்தில்
கால் வைக்கிற இடங்களெல்லாம் புதைகிறது.
முட்கம்பிகளிடமிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை பிடுங்கி எடுப்பேன்.
சிதைவுகளின் கையிலிருந்து
மெல்ல மெல்ல எனது நகரத்தை செழிக்க வைப்பேன்.
என் நகரத்தில் மீண்டும் பூக்களை நாட்டுவேன்.
பூக்களின் நகரத்தில் கனவுகள் பூக்கும்.
எல்லோரும் வரும் நாட்களில் திரும்புவார்கள்
என்ற நம்பிக்கையை நகரத்திலிருந்து வெளியேறிய
நள்ளிரவு சொல்லிக்கொண்டு வந்தேன்.
தனியொருவனாய் வந்திருக்கிற
என் காலடியை
எண்ணிக்கொண்டிருக்கிறது நிழலற்றுப்போயிருக்கிற நகரம்.
________________________
02.01.2010

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...