Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 5 பிப்ரவரி, 2009

யாருமற்ற நகரில் பறக்கும் கொடியின் கொடு நிழல்




சனங்கள் தம் காலடிகளையும்
எடுத்துச் செல்ல
கடல் நகரத்திலும் அசைந்தன
ஆக்கிரமிப்பின் கொடிகள்

அலைச்சலால் ஆன கால்களை
பிடுங்கும் எறிகனைகளில்
காயமுற்ற  கடல் நகரம்
பெருங் கையுள் சுருங்கிப்போனது.

கோவலன் கூத்தாடிய நகரத்தில்
திமிறி நிறைந்தன
படைகளின் வெற்றிக் கூச்சல்கள்.

யாருமற்ற நகரின் தெருவில்
தவித்து திரியும் நாயின்
எச்சிலின் வெம்மையில் பெருந்தவிப்பு

யாவற்றையும் தின்று பறக்கிற
கொடியின் நிழலில்
பசித்தலைந்தான் சிங்க அரசன்
அழிந்த நகரத்தின் அடியில்
புதைகிறது கடல் வாழ்வு.

நிலம் இருள
சூரியன்  கரைந்திற்று
பழமையான கிழக்குக் கடலில்

உடைந்த சுவர்களினையும்
நினைவுகள் எழுதப்பட்ட கற்களையும்
தின்று முன்னேறுகிறது
பசித்தலையும் கொடியின் நிழல்.

வற்றாப்பளை அம்மனும்
அகதி ஆனாள்.

பண்டார வன்னியனே
ஒருபொழுதும் வீழா நகரத்தின்
வெற்றுத் தெருக்களையே
அவர்கள் கைப்பற்றினர்.

வன்னி அரசனே
யாருமற்ற நகரில்
பறக்கும் கொடியின்
கொடு நிழலில்
தோல்வியின் முகத்தை
நீ காண்டாய்.
0

தீபச்செல்வன்

28.01.2009 முல்லைத்தீவு நகரத்தினுள் இலங்கைப் படைகள் நுழைந்தன.



0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...