Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 29 டிசம்பர், 2008

மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

மலைப்பாம்பு அரிசி மூட்டைகளுடன்
வருகிறது.

தனது வருகைக்கு முன்பாகவே
கொளுத்த மலைப்பாம்பு
நமது வாக்கு மூலங்களை
அவசரமாகவே தின்று விடுகிறது.

பாம்புகள் உட்புகுந்தலைகிற
நகரங்களில்
அவைகள் எழுப்புகிற புற்றுகளில்
முட்டைகளைப்போல
வாக்கு மூலங்கள்
விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மலைப்பாம்பு ஒன்றினது
வருகையை முன்னிட்டு
திருத்தப்படுகிற வீதியில்
வரவேற்பதற்காய்
குழந்தைகள் வரவழைக்கப்படுகிறார்கள்.

பிணைந்து கிடக்கிற இரண்டு
கைகளிற்குள்
பெருமெடுப்பில் அடிக்கிற
ஆயுத வெக்கையில்
முகங்கள் அவிகின்றன.

கொடிகள் நாட்டப்பட்ட
கதிரைகளின் முன்பாக
எனது நகரை
பெரும் புற்றாக்க அலைகிற
பெரும் பாம்பின் கனவுடன்
மலைப்பாம்பு பால் குடிக்கிறது.

ஒடுங்கிய பிரதேசத்தில்
அலைச்சல் மிகுந்த இரவில்
வாக்குமூலங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன.

எல்லாவற்றையும் தின்ற பாம்பு
வானத்தையும்
சமுத்திரத்தையும்
தின்றபடி
வருகையை திட்டமிடுகிறது.

கோழிக்குஞ்சுகள்
கூடைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

முட்டைகள் தின்று
அலைந்து கொண்டிருக்கிற பாம்புகளிடமிருந்து
கோழிக்குஞ்சுகளை
காப்பாற்றுகிற மலைப்பாம்பு
இன்னும் சில நாட்களில் வருகிறது.

முட்டைகளில் ஒளிந்திருக்கிற
குழந்தைகள்
வாக்குமூலங்களுடன்
வரவேற்க காத்திருக்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------
26.12.2008.பிரணாப்முகர்ஜியின் கொழும்பு வருகையை முன்வைத்து

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...