Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 22 அக்டோபர், 2008

குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்

-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

குழந்தையை படுக்கையில் வைத்து
தின்று முடித்த பாம்பு மெல்ல நகர்ந்து செல்கிறது
பாம்புகள் காடுகளை நிறைத்துவிட
காடுகள் மழையை நிறைத்துவிட
மழை இரவை நிறைத்துவிடுகிது.

உன்னைப்பிரிந்த சூரியன் எழும்பியிராத
கறுப்புக் காலையின் நாள்
மீண்டும் வருகிறது
கடைசியாய் அருந்திய தேனீர்
நீ ஊட்டிய கேக்
தீர்ந்து பசியெக்க தொடங்கிய நாள் வருகிறது
நீ என்னைப் பெற்றதும்
நான் உன்னைப் பிரிந்ததுமான நாள்
மெல்ல மெல்ல வந்துவிடுகிறது.

நீ எனது புத்தகங்களை விட்டுச்சென்றிருக்கையில்
நனைந்தழிந்த புகைப்படங்களின் குறையில்
எனது முகம் தேடுகிறாய்.

முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தன
குளங்கள் வற்றிவிட
ட்ராங்கிகள் நீந்துகின்றன
ஒவ்வொரு ஊரும் நகரும் வீழ்கிற பொழுது
உன்னைப்பிரிந்த வலியெடுக்கிறது.

குளங்களை படைகள்
குடித்து விட்டு எறிகிற எறிகனைகள் விழும்
மரங்களின் கீழே
உன்னை தின்பதற்காய்
அலையும் பாம்புகளை கண்டேன்.

தூக்கமும் கண்களும்
மழையில் தொலைந்து விடுகிறது
குழந்தைகளை பாம்புகள் இழுத்துச்செல்வதாய்
இறுக அணைத்துக்கொள்கையில்
மழை தாய்மாரை இழுத்துச் செல்கிறது.

மரங்களின் வேர்களினிடையே
உன்னோடு பொறுத்துவிடுகிற
எனது புகைப்படங்களில் பாம்புகள் அசைகின்றன
சமையல் பாத்திரங்களில் பசி நிரம்பியிருந்தது.

முதலைகள் மாமரத்தை தின்றுவிட
மழை வீட்டை தின்றுவிடுகிறது
படைகள் கிராமத்தை தின்று விடுகின்றனர்
முழுக் குழந்தைகளையும் தின்பதற்காய்
சருகுகளினிடையே பாம்புகள் காத்திருக்கின்றன.

உன்னைப்பிரிந்து வந்த எனது பிறந்தநாள்
தாங்கமுடியாத
தோல்வியையும் அவலத்தையும் நிறைத்து
மழையில் நனைந்த
அடுப்புக்கற்களினிடையில் கிடக்கிறது.
---------------------------------------------------------------------------
24.10.2008 அம்மாவை பிரிந்த எனது பிறந்தநாளை நினைவு கூர்ந்து
---------------------------------------------------------------

2 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

எப்போதும் போல வலி ததும்பும் கவிதை. நாங்கள் கவிதைகளில் வலி செய்கிறோம். நீங்களோ வலிகளால் கவிதை செய்கிறீர்கள்.

சித்தாந்தன் சொன்னது…

மனதை முழுவதுமாக வலிகளால் நிரப்பிவிடுகிறாய். பிறகு எதை எழுத நண்பனே.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...