Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 13 டிசம்பர், 2008

தேங்காய்களை தின்று அசைகிற கொடி

-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

உனது அப்பாவை தின்ற அதேகொடி
இன்று உனது நகர்
தேங்காய்களை தின்று அசைகிறது.

கொடூரத்தின் வெற்றிச் செய்தியில்
முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை
அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தேங்காய் உடைப்பதற்கு யாருமில்லை
எந்த தேங்காய்களுமில்லை.
கற்கள் நொருங்கிய வீதியில்
கச்சான் கடைகள் கைப்பற்றப்பட
உடைந்த அடுப்புக்கள்
நெருப்பாய் எரிய
தெருமுறிகண்டி வீழ்ந்ததென
கோயில் மணிகள் துடிக்கின்றன.

தும்பிக்கையற்ற பிள்ளையாரின்
கோயில் மணியை
படைகள் அசைக்க
நான் கிடந்து எழும்பிய
மடங்கள் பின்னால் நொருங்குகின்றன.
கழற்றி விட்டிச்சென்றிருந்த செருப்புகள்
கால்களை தேடுகின்;றன.

மீண்டும் முறிகிற வேப்ப மரங்களின் கீழே
எனது சைக்கிளை விட்டு வந்தேன்.
உனது சிறுநகரம்
வீழ்ந்ததெனக் கூறுகையில்
நமதாயிருந்த வீடு இழந்தோம்.

கண்டிப்படைகள் புகுந்து
கொடி பறக்கவிடுகையில்
நமது சனத்தின் தேங்காய்
உடைத்த கைகள் கழன்றே போயின
படைகள் நீ அணியும்
திருநீற்றை பூசுகின்றன.
சந்தனத்தை உரசி பூசுகின்றன.
நாம் நெற்றிகளை இழக்க
சனத்தின் முகம் சுருங்குகிறது.

உனது அப்பா மீட்ட
தெருவில் படைகள் மிதந்து நிற்க
மீண்டும் உன் வீடு சிதைந்துகொண்டிருக்கிறது.

பிள்ளையாரையும் கைவிட்டு வந்தோம்.
புத்தரின் பிள்ளைகள்
வெறிபிடித்தலைகிற
காடுகளில் இழக்கப்பட்ட
உனது அப்பாவின்
கோயிலை புத்தரே கைப்பற்றினார்.
கொக்காவில்
காடுகளின் கீழாய் இறங்குகிறது.

வெல்ல முடியாத யுத்தம்
மற்றொரு கோயிலை பிடித்துவி;ட்டு
மீள நகரக் காத்திருக்கிறது.
இந்தக் கொடி மீளமீள அசைந்து
வலியினை கிழிறிக்கொண்டேயிருக்கிறது.

உடைந்த தேங்காய்களை நம்பிக்கை
பொறுக்கி எடுக்கிறது.
சிரட்டை சில்லுகள் கூர்மையடைகின்றன.
அடுப்புக்கள் எரிந்து கொண்டேயிருக்கின்றன.

படைகள் அசைத்து குதிக்கிற
இந்தக் கோயில்மணி
இரணைமடுக் காட்டின் மரங்கள்
கொதித்தசைய
ஏதோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.
----------------------------------------------------------------------
11.12.2008.முறிகண்டி,கைப்பற்றல்.

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...