Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

திங்கள், 19 ஜனவரி, 2009

சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடையும் பொதிகள்




பொதிகளில் போட்டு அடைத்து வைத்திருக்கும்
வாழ்வை வெளியிலெடுக்க முன்பே
இந்தக் கிராமம் பெயர்ந்து திசைகளற்றுப் போகிறது.

கிராமங்கள் நிமிடங்களுக்குள்
மலை வீழ்வதுபோல அகப்பட
மீண்டும் பொதிகளில் கிராமங்களை அடைத்தோம்
விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்.

உலகிற்கு அழுது காட்டி
மூட்டை சுமந்து
கண்களற்றுப்போய்
கண்ணீரில் மிதப்பது விதியெனில்
வீடுகள் இழந்தும்
வெளியில் வரதவர்களாய் இருந்தோம்.

மாடுகளை பட்டியில் விட்டு வர
படைகள் எல்லாவற்றையும் அடித்துத் தின்றனர்
தண்ணீருக்கு அலையும் குழந்தைகளுடன்
வலி சுமக்கும் பாடு கொண்டவர்களாயிருந்தோம்.

எறிகனைகளிற்குள் தஞ்சமடையும்
நமதாய்ப்போன கொடிய விதியெனில்
நமதாயிருந்த ஊர்களை சுமந்து சென்று
கடலினுள் போட்டுக் கொண்டோம்
சுமக்க வேண்டியதை தவறவிட்டு
சந்ததிக்கு கையளிக்க
பெரிய சுமைப் பொதிகளை சுமந்தே வந்தோம்.

ஆயுதங்கள் எல்லாவற்றையும்
கையாண்டு முடிக்க
எஞ்சி இருந்தது
அழுகையின் மிகப்பெரிய மூட்டை.

இடுப்பில் தலையில் கால்களுக்கு பின்னால்
கொண்டு செல்ல வேண்டிய
பொதிகளை கைப்பற்ற
எறிகனைகளுடன் படைகள் வர
குழந்தையின் மூச்சையும் பொதியிலடைத்தோம்.

எல்லாம் பொதிகளில்

அழுகை நிரம்பிய
மிகவும் பாராமான பொதிகளை
நம் குழந்தைகளின்
கைகளில் கொடுப்பவர்களாய் ஆனோம்.
0

தீபச்செல்வன்

13.01.2009

2 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\"சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்"\\


தலைப்பே வலியோடு இருக்கு.

ப. அருள்நேசன் சொன்னது…

தீபச்செல்வன்

//விட்டு வந்தவை ஆடுகள் எனில்
வழி தவறியவர்கள் நாங்களாயிருந்தோம்//

உமது தலைப்பின் பெரும் பொறுப்பை இந்தவரிகளே சுமந்துவிடுகின்றன, ஆரம்பவரிகளும் கூட அருமையானவை.

தொடர்ந்தும் எழுதுங்கள், உமது கவிதைகள் மிக நீழமானவையாகத் தெரிகிறது, காத்திரமான இறுக்கமான கவிதைகள் சுருக்கமானதாக இருப்பதே நல்லது என்பது எனது கருத்து

சிநேகத்துடன்
ப.அருள்நேசன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...