Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 9 ஜூன், 2009

அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------

இரவு திசைகளை தின்று
பரபரத்துக்கொண்டிருக்க
நீ புறப்பட்டிருந்த கடலை
யாரோ தின்றுகொண்டிருந்தனர்.
கையில் இழுபட்ட
பிள்ளைகளின் மெலிந்த
தோள்ககளைத் தவிர
ஒன்றையும் எடுத்துவரவில்லை.

அலைச்சலின் பெருந்துயர்கள்
கடலில் உன்னை துரத்தி வந்தது
வலியின் கோடி முகங்கள் சுற்றியிருக்கிற
உன்னை நான் சந்திக்கப்போவதில்லை.
வளர்ந்துபோயிருக்கிற
தோல்வியின் சொற்கள் எதையும்
பகிரவேண்டாம்.
ஞாபகங்கள் துடித்துக்கொண்டிருக்கிறது.

நடைகள் நிறைந்த மணலையும்
துண்டு நிலத்தின் பெரும் புகையையும்
சுருட்டி எடுத்து வந்து
பூவரசின் வேரை பன்றிகள் தின்னுகிற
கவிதை கொண்டு வந்திருக்கிறாய்.
அந்தப் பூவரசு சலசலத்துக்கொண்டிருந்த
பின்மாலையில்
முகத்தை கரைத்துத்தானே வழியனுப்பினாய்.

பன்றிகள் கிளறியெறிந்த வீதியில்
அந்த பூவரச மரத்தினடியில்
கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள்.
நீ வைத்திருக்கிறாய்
பூவரச மரத்தின் துயர் படிந்த கிளைகளையும்
கிளறுப்பட்ட வீதியின் துகள்களையும்.

நீரை விரித்துக்கொண்டிருக்கிற
அடரும் கொடிய இரவில்
காற்றில் பன்றிகள் முட்களுடன்
வந்தன என்கிறாய்.
தனித்துப் புறப்பட்ட பயணத்தில்
எல்லாமே கரைந்துபோகிறது.

வெறுமையின் கீழ் குந்தியிருக்கிற
உன்னை பார்க்கப்போவதில்லை.
நம்பிக்கை தரமுடியாதிருக்கிற
உரையாடல் ஒன்றும் உன்னுடன் வேண்டாம்?
கூடாரத்தில் மணல் உதிர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.

காய்ந்துவிடாத குருதியையும்
மணல் குடித்து முடிக்காத கண்ணீரையும்
கொண்டு வந்திருப்பாய்.
கரை அரிபட்டுக்கொண்டிருக்கிற கடலை
நீ இறங்கிய பிறகும்
யாரோ தின்றுகொண்டிருக்கின்றனர்.
---------------------------------------------------
07.05.2009. நன்றி அம்ருதா ஜூன்2009

1 கருத்துகள்:

M.Rishan Shareef சொன்னது…

இயலாமையும் பொய்த்துப் போன வாழ்வின் எதிர்பார்ப்புக்களும் கவிதையாக்கப்பட்டிருக்கிறதென எண்ணுகிறேன். வரிகள் முழுதும் மிகுந்த வலி தெரிகிறது.
அருமையான கவிதை !

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...