Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

திங்கள், 17 நவம்பர், 2008

அண்மையில் மிதிபடுகிற கடல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

மடுமாதாவின் பெருமூச்சு
அடிபடுகிற
பூநகரி கடல் வெளியில்
உப்புக்காற்று
சுழன்று அவதிப்பட்டு திரிகிறது.
நொருங்குண்ட
முடியை அணிந்த மாதா
பரந்தனையும் தாண்டிப்போகிறாள்.

மிக அண்மையில்
வந்து உறுமுகிற ட்ராங்கியில்
எனது கடல் மிதிபடக் கண்டேன்.
வலைகளில்
வந்து மாட்டித்துடிக்கிற
மீன்களின் குருதியில்
டோறாக்கள் பயணிக்கத் தொடங்குகின்றன.

மெல்லிய இரவும்
மிகவும் பெரிய கடலும்
அடர்ந்த காடுகளும்
சனங்களை இழக்க வைத்த
இராணுவ நகர்வுகளிடம்
சிக்கித் தவிப்பதை நான் கண்டேன்.

மேற்குக் கடல் கரைகளை
இழக்க காயப்பட்டு துடிக்கிறது
கடற்கரைத் தெரு.
இரண்டு பெரும் தெருவின்
நடுவில்
மாட்டிப்புரள்கிற கடல்
திரும்பமுடியாத
திசைக்கு சென்றுவிடுகிறது.

மீன்பிடிக்கிற படகுகளை இழந்த
கரையிலிருந்து
கடல் எட்டிச்செல்கிறது.
தென்னை மரங்கள்
மணல் வெளியில் புதைய
ஆயுதங்கள் கொண்டு வருகிற தெரு
வீழ்ந்து நெளிகிறது.
கிராஞ்சியில் விமானத்தின் குண்டுகளில்
சிதறுண்ட குழந்தைகளின்
கைகளை படைகள் மீட்டெடுத்தனர்.

இராணுவ வண்டிகள்
மிதித்துத் திரிகிற கடலின்
மிகவும் பிரியமான கரையை
படைகள் தின்று மகிழ்ந்தாட
அதன் சனங்கள்
வெயிலில் விழுந்து துடித்தனர்.

பின் நகர்ந்த சனங்களின்
வீடுகள்
சங்குப்பிட்டிக் கடலில் கரைக்கப்பட
கைவிடப்பட்ட தனிமையுடன்
கிடக்கிறது மிகப்பெரிய கடல்.

இரண்டு இராணுவத்தளபதிகள்
மிதித்து
கைகுலுக்க முன்பாகவே
ஜனாதிபதியின் வெறிச்சொற்கள்
ஓலிக்கத் தொடங்கிய நாளில்
இறந்து போக
எனது கடல் வீழ்ந்த தெருவில்
காய்ந்து மிதிபடுவதை
நான் கண்டு துடித்தேன்.
----------------------------------------------------------------------------
14.11.2008 பூநகரி,புலிகள்,பின்நகர்வு,ஆக்கிரமிப்பு

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...