Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

வியாழன், 2 அக்டோபர், 2008

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.


---------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

ஆள்களற்ற நகரத்திலிருந்த
ஒரே ஒரு தொலைபேசியில்
இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்
கூரை கழற்றப்பட்ட
மண்சுவரிலிருந்த
நாட்காட்டியும் கடிகாரமும்
புதைந்து கிடக்கிறது.

பூவரச மரத்தின் கீழ்
உனது கடைசி நம்பிக்கை
தீர்ந்து கொண்டிருக்கிறது.

எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்
கைவிடப்பட்ட படலைகளிலும்
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.

உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்
கேட்க முடியவில்லை
ஐநாவில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்
உனது மொழி
நசிபட்டுக்கொண்டிருந்தது
அழுகையின் பல ஒலிகளும்
அலைச்சலின் பல நடைபாதைகளும்
சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட
தலைகள் அசைந்து கொண்டிருந்தன.

கைவிட்டுச்சென்ற
கோழியும் குஞ்சுகளும் இறந்துகிடக்க
வெறும் தடிகளில்
தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்
அழுதபடியிருந்தன.

நேற்றோடு எல்லோரும்
நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஐநாவின் உணவு வண்டியை
துரத்திச் சென்ற சிறுவனின் பசி
ஓமந்தை சோதனைச்சாவடியில்
தடுத்து வைக்கப்படுகையில
குண்டைபதுக்கிய அமெரிக்கன்மாப்பையில்
உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.

வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்று நள்ளிரவோடு
வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்
அறிவிக்கப்படுகையில்
மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------
01.10.2008இரவு8.00

2 கருத்துகள்:

தமிழ்நதி சொன்னது…

வழக்கம்போல மனதை அசைத்த கவிதை. நிராதரவான அவர்களை கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது விதியாயிற்று. இப்போதெல்லாம் பரிதாபப்பட்டு ஒரு வார்த்தை சொல்வதுகூட குற்றவுணர்வையே தருகிறது. என்ன செய்தோம்? என்னதான் செய்யவியலும்?

Theepachelvan சொன்னது…

அன்புள்ள தமிழ்நதி.

கருத்துக்கும் வரவுக்கும் நன்றி.


தீபச்செல்வன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...