Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

வியாழன், 15 ஜனவரி, 2009

மரண நெடில் வெளி இரவு



வானம் எமக்கில்லை என்றனர்
காடல் பிரித்து அள்ளி எடுக்கப்பட்ட பட்டினத்தில்
மனங்களை புதைத்து வருகிற
ட்ராங்கியில் தலைகள் நசிந்து கொண்டிருக்க
தெருக்கள் கடலில் தொலைந்தன.

தோல்விப்படுத்திய மிகவும் அகலமான
கைகள் எல்லாவற்றையும் கடலில் கொண்டுபோய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகளற்ற இரவில் மரண நெடிலில்
முழ்குகிறது வெளி.

முகங்கள் கிழிக்கப்படும் தீர்வில்
தப்பிச் செல்ல வழிகளற்று
ஒடுங்கிய இரணடு மரங்களினிடையில்
ஒரு பொந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெரிய உலகத்தின்; வெடிகள்; கொட்டுகிற
கண்ணாடியில்
குழந்தைகள் சிரிக்கிற பிம்பங்கள் தெரிந்தன.

தொன்மங்களை கண்டுபிடிக்கும்  
படைகளின் வருகைகளின் போது
இரண்டொரு நாய்கள் திரியும் நகரத்தில்
ஊழைச்சொற்கள் கேட்டன.

எல்லாம் களவாடிய பிறகு
மிஞ்சியிருந்த மனங்களை தேடியழிக்க
புதிய நிறங்களாலான உடைகளில் திரிந்தது சிங்கம்.

விழிகள் மூட
இரவுகள் அலைகிற நாட்களில்
கறுப்பு நிலவுகள்
உதிர்ந்தன வானத்திலிருந்து

தாழ்ந்துபோன கடலில்
பெரு வானம் கவிழ்ந்துபோக
ஆட்களற்ற வெளியில் எங்கும் பொதிகள்
தோல்வி எழுதப்பட்ட வரலாற்றில்
மரண நெடிலடித்தது

மிதிபடுகிறது
நமது வாழ்வெளியின் மண்.
0

தீபச்செல்வன்

13.01.2009

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...