Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 3 நவம்பர், 2008

நம்மைத் தொடருகிற போர்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01
போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்
எழுதிச் செல்கிறேன்
எல்லாம் மாறி உடைத்த பொழுதும்
போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை
யுத்தம் உன்னையும் என்னையும்
தின்பதற்காய் காத்திருக்கிறது
காலம் நம்மிடம் துப்பாக்கியை
வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.

கருத்தப்பூனையைப்போல
கருணாநிதி
மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்
நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து
பூனைகள் வெளியேறுகின்றன
வாய் கட்டப்பட்டவர்களின்
பேரணிகளிலும்
பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.

புல்லரித்து முடிந்த நிமிடங்களில்
வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது
முப்பது வருடங்களை இழுபடுகிற
போரை உணவுப்பைகளில்
கறுத்தப்ப+னைகள் அடைக்கின்றன.

02
போர் தீர்வென்று வருகையில்
நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்
விமானங்களை நம்பியிருக்கும்வரை
குண்டுகளை நம்பியிருக்கும்வரை
துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை
நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன
நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.

போர்க்களங்களில் தீர்வுகள்
இலகுவாகிவிட்டன
நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை
உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்
நம்மோடு முடிந்துபோகட்டும்
விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன
மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து
நமது விமானங்கள் எழும்புகின்றன
எனது காயத்திலருந்து வெளியேறுகிற
குருதி காவலரணை கழுவுகிறது

03
ஓவ்வொரு செய்தியின் கீழாயும்
மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்
அதன் மேலொரு கோடு கீறினேன்
பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற
விமானங்களின் கீழாய்
பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட
புகைப்படத்தை நீ கண்டாய்
விமானங்களும் அதன் இரைச்சல்களும்
நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன
ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்
ஒரு எறிகனையைப்போல
இராணுவத்தளபதி வருகிறார்.
கருணாநிதி ஒரு கிளைமோரை
பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்

04
அழுகை வருகிறது
தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன
எனினும் இந்த மரணம் ஆறுதலானது
அதில் விடுதலை நிரம்பியிருந்தது
இரண்டு வாரங்களில்
எடுத்துப்பேச முடியாத போரை
நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்
நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்
சக்தி இருக்கிறது
மரணங்கள் பதிலளிக்கும்பொழுது
குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற
அரசியல்வாதிகளிடம்
நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.

அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்
உலகம் மாதிரியான
குண்டுகள் அறிமுகமாகிவிட்டன
மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற
போரை எதிர்க்கும் பொழுது
துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன
நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.

05
பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்
இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது
எனக்கு இந்தக் கல்லறைகளை
எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.

படைகள் புகுந்துநிற்பதாய்
கனவு காண்கையில்
தூக்கம் வராத நாட்களாகின்றன
வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட
பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்
திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க
எப்படி தூக்கம் வருகிறது
அதுவே தீர்வாகையில்
கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.

தீர்க்கமுடியாத பிரச்சினைகள்
போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன
நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது
அதன் பின்னால்
அழிகிற இனத்தின் நகரங்கள்
புரதானங்கள் குறித்து
சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர
எதனால் பேசமுடிகிறது?

06
நீ போர் அழகானது என்றாய்
உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது
அம்மா பின்னால் நிற்க
நான் சுட்டுக்கொண்டிருந்தேன்
நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.

நம்மால் சட்டென பேசமுடிகிறது
துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை
மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது
மரணங்களின் பிறகு போர்க்களம்
அடங்கிக்கிடக்கிறது
நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்
மேடைகளைவிட்டிறங்கி
கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.

படைகளும் நகரத் தொடங்க
நாம் மீண்டுமொரு சமருக்கு
எதிராக தயாராகினோம்
சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற
தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.
----------------------------------------------------------------
8.35, 31.10.2008

3 கருத்துகள்:

சாந்தி நேசக்கரம் சொன்னது…

போர் நிகழும் பூமிக்குள்ளிருந்து போப்ப்பாடல் இனிக்காது தீபச்செல்வன். கவிதைகள் கண்ணீரூடு கதை சொல்கின்றன.

- சாந்தி -

ஃபஹீமாஜஹான் சொன்னது…

இத்தனை இடர்களுக்கு மத்தியில் இருந்தும் எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் எழுத்து தொடரட்டும்.

எல்லாவற்றையும் தின்றழிக்கும் போர் கடைசியில் விட்டுச் செல்வது அழியாத வடுக்களையும் இவை போன்ற படைப்புக்களையும் மாத்திரம் தான்.

Dr.Naganathan Vetrivel சொன்னது…

savaale.blogspot.com said
etiri enna periya neruppa

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...