Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

தாகம் பாய்கிற நதிக்கான கனவு


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________


தண்ணீர் வற்றுகிற வாய்க்காலினை
சிரட்டையால் தோண்டுகிற சிறுவனிடம்
பாலைவனம் எரிகிற தாகம் முட்டியிருந்தது.

வெறும் குடங்களில்
ஏங்கங்களை நிரப்பி வைத்திருக்க
ஒரு இரவில் பிட்டுடன்
அருந்திய தண்ணீர் ஒரு நதியென
கனவில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

எல்லாத்திசைகளிலிருந்தும் எறிகனைகள்
வருகிறபோது
குழந்தைகளை காத்துக்கொள்ளுகிற
கோயில்களை கூப்பிட்டோம்.
வானம் முழுக்க விமானங்கள்
நிறைகிறபோது குழந்தைகளை
கூட்டி அணைத்தோம்.
கோயிலிலும் தெய்வங்கள் வெளியேறின.

சிதறுண்டுபோன மனித உடல்கள்களை
விட்டுச்செல்கிற போது அவலத்தின் பெரு நதி
கிணறுகளை அள்ளிச் செல்ல
தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து
வானம் வெளியேறுகிறது.

கிணறுகள் எங்கும் குழந்தைகள்
ஒளிந்திருக்க தண்ணீர் முழுவதும் வற்றிப்போனது.

கூட்டுக்குள் வைத்து வேட்டையாடப்டுகிற
பறவைகளிடம் இனியொரு நதியினெ வளர்ந்த கனவு
முழுவதும் சுட்டு விழுத்தப்படுகிறது.
ஒரு நிமிடத்திலேயே
பிரிந்தபோன வாய்க்காலின் கரையில்
தென்னை மரத்தில் சிரட்டைகள் உதிர
வாய்க்காலில் பாலைவனம் பாய்கிறது.

பொதிகளுக்குள் தண்ணீர் தாகங்களை
நிரப்பி சுமக்கிற தெருவின்; நடுவில்
கிணறு திறபட்டிருக்க அதற்குள்
மூடுண்டு போகிற தணலெரிந்தன.

அந்தச் சிறுவனும் இல்லை.
வாய்க்காலும் இல்லை.
பெருகுகிற தண்ணீருக்கான தாகத்தில்
குடங்கள் திரிய வாளிகளுள்
சிறுவர்களின் வளர்ப்பு மீன்கள்
உடல் காய்ந்து அலைந்தன.

காய்ந்த ரொட்டியின் மீது
அவன் எழுதிய சொற்கள் வெறுமையாயிருக்கிற
ரொட்டித்தகரங்களில் சுடுபட்டன.

இல்லாத மாவுக்கு வரிசை கட்டி நிற்கிற
கடையில் பிட்டு சுமக்கிற தேவாரங்கள் நினைவு வர
குறைந்து வருகிற தரையில்
தண்ணீர் மேலும் காய்கிறது.

தண்ணீருக்கான வழிகள்
அடைபட்டுடிருக்க
வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்
முற்றுகை அதிகரித்த காட்டினுள்
மீள பெயர்ந்து பாய்கிறது.
------------------------------------------------------------------------------------
13.01.2009

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...