Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஜீவா வரைந்த ஓவியம்
0 Comments - 08 Aug 2023
 தமிழ்நாட்டின் பிரபல ஓவியர் ஜீவா சிங்களத்தில் வெளியாகவுள்ள புத்தகத்தின் அட்டைக்காக வரைந்த ஓவியம்....

More Link
தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?
0 Comments - 03 Jul 2023
ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.2008இல் பத...

More Link

திங்கள், 16 மார்ச், 2009

ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்


---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
இப்படித்தான் அந்த கொடுமிருகம்
இந்த நகரத்தையும் தின்று கொண்டிருந்தது.
கடல் மேலும் காய்ந்துவிட
மிருகத்திற்கஞ்சி மண் சுருங்கி ஓடுகிறது.

கால்களிற்குள் நீளுகிற அலைச்சலில்
தொலைந்து போன பொருட்கள் மிதிபடுகிற
நடைக்கனவுடன்
உன்னை தேடியலைகிறேன்
பின்னேரம் சுற்றுகிற முற்றுகையில்.

மண் கிளம்பி பெயர்கிறது.
சந்தி உடைந்து படைகளின் கால்களால்
எத்துப்படுகிறது.
சுவருக்குப் பக்கத்தில் நிற்கிற
மிருகம் பின் கோடியை தின்னுகிறது.

கூரைகளை கடித்து துப்பிவிட்டு
ஒழுங்கையை பிடித்துச் செல்லுகிறது.
முகப்பை நகங்களால் விறாண்டி
தனது மொழியில் பறகள் வரைகிறது.
பேய்கள் புகுந்து அடித்து
கடைகளை தின்றிருக்க
பனைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

கடலில் புதைந்து கிடந்த
உனது சொற்களில் வடிகின்றன
இந்த சின்ன நகரத்தின் பாடல்கள்.
சாம்பலை நிரப்பி
எறியப்பட்டிருக்கிற சாடியில்
உன்னை அடைத்து வைத்திருந்தனர்.

கடைசி வார்த்தைகளால்
நம்மை வதைத்துக் கொண்டிருக்கிற
கர்ஜிப்பில் கடைசியாயிருந்த
நகரம்
மூச்சடங்கி கிடக்கிற பறவையைப்போல
துடித்து உயிரற்றுக் கிடக்கிறது.

இப்படித்தான் அந்த கொடுமிருகம்
நம்மை குறித்து ஒரு நாள்
அச்சுறுத்தியபடியிருந்தது.
நகரங்கள் ஆட்களற்றுப்போனது.

பசிக்கு ஏற்றபடி கால்களால்
நகரத்தை வளைத்து வைத்து
தின்றுகொண்டிருக்கிறது ஒற்றை மிருகம்.
கிளம்புகிற மண் வீதிகளால் பெருகி வழிகிறது.
----------------------------------------------------------------------------------
03.03.2009,புதுக்குடியிருப்பு,நகரம்,வீழ்ச்சி.

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...