Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 14 பிப்ரவரி, 2009

அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல்




இலைகொட்டிய அலம்பல்களில்
குந்துகிறது துரத்தப்படும் கூரை.

களப்புவெளியின் சகதிக்குள்
புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள்
ஒளிந்திருக்கும் குழந்தைகளை
தேடுகின்றன கொத்துக் குண்டுகள்.

ஒற்றை புளியமரத்துடன்
வெளித்துக்கிடக்கிறது மாத்தளன்.

விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள்
விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்
நிறையும் சுடு மணலில் ஓடும்
குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன.

பனைகளுக்கிடையில்
படருகிறது கந்தக வெம்மை
உவர்க்களியில் கொதிககும் ஈரலிப்பில்
எழுத முடியாத சொற்கள்

உப்புவெளியில் பாதிச்சூரியன்
சுருண்டு விழ
அனல் காற்றில் பறந்துபோகிறது
இல்லாத குழந்தைகளது
அகற்றிக்கொண்டு வரப்படும் சட்டைகள்
கிணியாத்தடிகளில்
கட்டிய கயிறுகளுக்கிடையில் தொங்குகிறது
நேரம் குறித்திருக்கும்
கொடு நெருப்பின் கடைசித்துளி.

சன்னங்கள் வந்து மிரட்டும் இரவில்
உடல்வேலன் முள்ளுகளுக்குள்
ஒளிந்தனர் குழந்தைகள்

மண் துடிக்க
கடல்
மேல் எழுந்தது.

முன்பொரு வலயத்தில்
சிதறுண்டுவர்களின் பெயர்களை
யாருமற்ற சிறுவன்
சுடு மணலில் எழுத
கள்ளிச்செடிகளுக்குள் கிடக்கிறது
மிஞ்சியிருக்கும் அவனின் ஒற்றைப்பொதி.

நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற
பெருங்குரல்கள் கேட்கிறதா
பெருங்கடலே?

ஒற்றைத் தென்னை மரத்துடன்
வெளித்துக் கிடக்கிறது வட்டுவாகல்.

தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்
பெருங்கனவு மிதக்கக் கண்டேன்
ஒரு பெருமிருகம்
முள்ளிவாய்க்காலை தின்னத்
திட்டுமிடுகிற குருட்டிரவில்
அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக
பெரும்பாம்பு அலைகிறது.

மணல் சுடாகி கொதிக்கும் கரையில்
ஒரு பொட்டென மிதக்கிறது
எம் கண்ணீராலும் குருதியாலுமான கடல்.
0

தீபச்செல்வன்

12.02.2009, வட்டுவாகலுக்கும் மாத்தளனுக்கும் இடையிலான பகுதியை பாதுகாப்பு வலயமாக  அறிவித்து அப் பகுதியில் கடும் யுத்தத்தை மேற்கொண்டது இலங்கை அரசு. 


0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...