Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 23 மே, 2009

பந்துகள் கொட்டுகிற காணி

---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------

மைதானத்துக்கான சமர்
ஓய்ந்துபோக மீளவும் தொடங்குகிறது
தீராத பேரினநோயின் யுத்தம்.
கூடாரத்தில் அடைந்துவிட
தாடி வளர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.
உயிர்கள் கறுகிய மைதானத்தை
நனைக்கிறது இறுகிய மழை.
வாழ்வு
கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட
பெருமிதங்களால்
வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்
மிதந்துகொண்டிருக்கிற
கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்
இழந்து போயிருக்கிறோம்.
இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்.

என்னை அழைத்துச் செல்லுகிறபோது
முழு மரங்களும் பக்கத்தில் உதிர்ந்ததுபோல
அதிருகிறது உனது முகம்.
பான்கீமூனின் கைகளில் துவக்கு இருப்பதை
நீயும் நானுமே காணுகிறோம்.
இன்னும் அடங்காமல் பசித்திருக்கிற
துவக்குகளால்
சூழப்பட்டிருக்கிறது நமது காணி.

மண்ணடியில் நமது சிதைந்த வேரில்
திணிக்கப்படுகிற சொல்லாடல்களில்
நாம்தான் உன்மையில் தோற்றிருக்கிறோம்.
மைதானத்தைவிட்டு
வெளியேறிக்கொண்டிருக்கிறது யுத்தம்.

நாராயணனின் கைகளிலும்
மேனனின் கைகளிலும் பந்துகள் உருளுகின்றன.
பந்துகள் கொட்ட
தலைகள் சிதறுகிற காணிக்கிராமங்களில்
அருசி மூடைகளும் வந்து விழுகின்றன.

இனி கனவுகள் குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இறப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.

நம்மை வென்றுவிட்டு கிடக்கிற
யுத்தம்
அறிவிப்பின்றி மெல்ல தொடருகிறது.
மனங்கள் காயப்படுத்தப்பட
தலைகள் கழற்றப்படுகின்றன.
நமது மைதானத்தில்
பந்தாடிக்கொண்டிருக்கிறது உலகம்.
குடிக்கிற தண்ணீருக்கான
வரிசை நீளுகிறது.
-----------------------------------------------------------------
21.05.2009

1 கருத்துகள்:

உமா சொன்னது…

//பயங்கரவாதமாக வேர் அறுக்கப்பட்ட
பெருமிதங்களால்
வாழத்துக்களால் வெற்றியின் களிப்பில்
மிதந்துகொண்டிருக்கிற
கொண்டாட்டங்களில் நாம் எல்லாவற்றையும்
இழந்து போயிருக்கிறோம்.//

பிரபாகரன் இறந்துவிட்டதாகவே கொண்டாலும், போரில் பாதிக்கப்பட்ட ஓரினமே துன்பத்திலிருக்க அருகிலேயே பிறர் வெற்றி களியாட்டத்தில் குதிப்பது மனித்தன்மையுள்ள செயலாகத்தெரியவில்லை.வெக்கம்.

தமிழர் நிலமை மேம்பட பிரார்த்தனையுடன்.
உமா.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...