Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 16 ஜூலை, 2007

முகம் எரிந்துகொண்டிருக்கிறது

-----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
______________________________________
குரலைத்திருகியவர்கள்
இசைக்கருவிகளை உடைக்கவருகிறார்கள்
வார்த்தையை அடைத்தவர்கள்
நாவின்மீது
வாள்வீச வருகிறார்கள்
குழந்தைகளின்
புண்னகைச்சின்னங்களை
நெற்றியில் பொறித்துக்கொண்டு
பிணங்களை கணக்கெடுக்க
வண்டிகளில் வந்திறங்குகிறார்கள்.
புதைந்தவர்களின் வாக்கு மூலம்ங்கள்
தட்டிக்கழிக்கப்பட்டன

அமைதியைப்பற்றி
பிரசங்கம் செய்தவர்கள்
ஆயுதங்களை வழங்குகிறார்hகள்
அபிவிருத்தியைப்பற்றி
ஆய்வு நடத்தியவர்கள்
குண்டுகளை கையளிக்கிறார்கள்
பயங்கரவாதம் பற்றி
விளக்கமளித்தவர்கள்
அதிவேக விமானங்களை
பரிசளிக்கிறார்கள்.
சாகசங்களே பாராட்டப்படுகின்றன.

அவர்கள் யாரும்
எல்லைகளைப்பற்றி
ஏன் பேசாதிருக்கிறார்கள்?
எல்லை தான்டி வரும்
பயங்கரவாதத்தை எதிர்த்து
தீர்க்கப்புறப்படுபவர்கள்
சிதறிய ஊர்களின் தரிசனத்திற்கு
ஏன் எல்லை தாண்டிவரவில்லை?
பாராமுகங்களை படைத்து கைமாறினர்.

கல்லறை நிறம்பிய
ஊர்களின்பாடலிடம்
எதுவரை செவிடராயிருப்பர்?
குருதி பாய்ந்து கொண்டிருக்கும்
நதியிடம் கால்நனைத்தும்
எதுவரை உணராதிருப்பர்
அந்தரப்படும் அப்பாவிகளின்
ஆன்மாக்களின் மொழியிடம்
எதுவரை ஊமராயிருப்பர்
தமது வர்ணவண்டிகளை
மிக வேகப்படுத்தினர்.

வயிறுகளில் வெறுமை முட்டிய
பசியின்கேள்விகளிடம்
இறுக மூடிய தெருக்களிடம்
சிறைப்படுத்தப்பட்ட ஊர்களிடம்
சித்திரவதைக்கப்படும்
சிறைக்கூடங்களிடம்
பயணங்களை கைது செய்யும்
காவல் விதிகளிடம்
அடையாளத்தை அழிக்கும்
நிறைவேற்று அதிகாரத்திடம்
கண்ணாடிகளை அனிந்து
எதுவரை குருடராயிருப்பர்.
முகங்களை மாற்றி
வார்த்தைகளுக்கு நிறமணிந்து
மாளிகைகளுக்குள்
அடைந்து கொண்டனர்.
முகம் எரிந்துகொண்டிருக்கிறது.
_________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்.தினக்குரல்.தின்னை

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...