Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 12 ஜூலை, 2007

சிறைச்சாலை அல்லது அகதிமுகாம் ஒன்றிலிருந்து..

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------------------

உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்
எல்லோரும் அழுதபடி
இருக்கிறார்கள்
நாங்கள் தங்கியிருப்பது
மாணவ விடுதியல்ல
சிறைச்சாலை அல்லது
அகதிமுகாமாக
இருக்கவேண்டும்.

இங்கிருக்கும்
சில சகோதரர்களின்
உறவுகள் அங்கு
விமானங்களால்
பலியெடுக்கப்பட்டடதாக
அழுதுகொண்டிருக்கிறார்கள்
யாருக்கும் யாரும்
ஆறுதல் சொல்ல முடியாது
மூலைகளில்
வைக்கப்பட்டிருக்கிறோம்.

நேற்று முன்னயை தினம்
எங்களோடிருந்த
மாணவர்கள் இருவர்
சுட்டுக்கால்லப்பட்டுவிட்டார்கள்
எங்களால் அவர்களுக்காக
சத்திமிட்டு
அழக்கூட முடியவில்லலை.

அகதி முகாமாயிருக்கும்
எங்கள் விடுதிமீது
கைக்குண்டுத்தாக்குதலும்
நடத்தப்பட்டது
சிலர் வைத்தியசாலையில்
மருந்துப்பொருட்கள் இன்றியும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் தங்கியிருக்கும்
மாணவ அகதிமுகாமிற்குள்
அச்சுறுத்தும்படி
ஆயுதங்களுடன் புகுந்து
சோதனையிடப்பட்டது
முகாம்களை தகர்ப்பதுபோல
முற்றுகையிடப்பட்ட
நாளின் அதிர்ச்சியில்
எல்லோரும் படுகொலைசெய்யப்பட்ட
புத்தகங்களாக பரவி இருக்கிறோம்.

எங்களில் சிலரை காணவில்லை?
ஊரடங்கு அமுலில் சிலர்
காணாமல் போகிறோம்?
ஊரடங்கு அமுலற்றபோது
பலியெடுக்கப்படுகிறோம்
எல்லோரும் வேண்டுமளவுக்கு
கெளரவமாக வருத்தப்படுகிறோம்.

எவ்வளவு வலிமையாயிருந்த
எங்கள் குரலின் நாடி
துப்பாக்கிகளின் முற்றுகையிலும்
பச்சை உடைகளின்நிழலிலும்
அன்றைக்கு
ஒடுக்கித்தான்போனது
அவர்களது துப்பாக்கிகளும்
வீடியோக்களும்
எங்கள் முகங்களை
பதிவுசெய்தபோது
உன் முகமும் அழைப்பும்
அவசரமாகவே ஞாபகமானது
--------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...