Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 11 பிப்ரவரி, 2016

கவிதை எனது ஆயுதம்



என்னிடம் துப்பாக்கிகள் இல்லை
பீரங்கிகள் இல்லை
குண்டுகளும் டாங்கிகளும் இல்லை
வார்த்தைககள் மட்டுமே உண்டு

அவை என்னுடைய வார்த்தைகளல்ல
என்னுடைய நிலத்தின் வார்த்தைகள்
என்னுடைய சனங்களின் வார்த்தைகள்

துப்பாக்கிளோடு அலையும்
டாங்கிகளின் உலவும் வீரமிகு படைகள்
என் கவிதைகளுக்கு ஏன் அஞ்சுகின்றனர்?

எதிர்வீடுகளில் விசாரிப்பதுவும்
தெருவில் என் கால் அடிகளை எண்ணுவதும்
அறியாத தொலைபேசி எண்களிலிருந்து
பதிலற்று அழைப்புக்களை துண்டிப்பதுவும்

நள்ளிரவில் நாய்களை குலைக்கச் செய்வதும்
நண்பகலில் மோட்டார் வண்டியில்
உறுமியபடி செல்வதும்
என் புத்தகங்களை தேடுதல் செய்வதும்
எனை ஏதோ செய்யுமென நினைத்தனர்
வீரமிகு படைகள்
   
உன்னுடைய துப்பாக்கிகளை முறிக்கும்
குண்டுகளை நொருக்கும்
பீரங்கிகளை உடைக்கும்
டாங்கிகளை சிதறடிக்கும்
முகாங்களை அழிக்கும்
எனது வார்த்தைகளுக்கு நீ அஞ்சுவாய்

நாமோ எமது நிலத்திற்காய் 
போராடுகிறோம்
நீயோ எம்முடைய நிலத்தை அபகரிப்பதற்காய்
போர் புரிகிறாய்

ஆதலால் நீ என் கவிதைகளுக்கு அஞ்சுவாய்
என் சனங்களுக்கு அஞ்சுவாய்
என் நிலத்திற்கு அஞ்சுவாய்
0

தீபச்செல்வன்

நன்றி - தீராநதி
பெப்ரவரி 2016

2 கருத்துகள்:

உமா சொன்னது…

கருத்தின் கூர்மையில் இரணமாகும் நெஞ்சங்கள்...

DocNiyo சொன்னது…

உன்னுடைய துப்பாக்கிகள் என்று ஆரம்பித்த பந்தி மிக அருமை

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...