Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 27 மார்ச், 2010

பெருநிலம்: காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது


o தீபச்செல்வன் ----------------------------------------

(இன்னுமின்னும் அறியாச் சேதிகள்
அந்தப் பெரு நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

யாரும் அறிந்து முடிக்காத மரணங்கள்
நந்திக்கடற்கரையில் கசிந்து கொண்டிருக்கிறது.
எல்லா விதமான சித்திரவதைகளையும் நீளமாக கொலுவிய
ஓளிநாடாவை
தங்கள் இரவுத் தொலைக்காட்சிகளில்
படைகள்
பார்த்து பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட
பெருநிலத்தில் விரும்பிய எல்லாமே நிகழ்த்தப்படுகிறது.

எல்லாற்றையும் ஞாபகப்படுத்துகிற
பெரிய துப்பாக்கியை வைத்திருக்கிற
அந்தப் பெரிய இராணுவ வீரனை
ஆட்கள் தங்கள் கனவுகளை இறுகப்பிடித்தபடி
புதைக்கப்பட்ட வெளியிலே நட்டு வைத்திருக்கிறார்கள்.
மூர்க்கமும் வெறியும் கொண்ட
அந்த இராணுவ வீரன் அச்சம் தரும்படியான முகத்தை
பெரு நிலத்தின் முழுத் திசைகளுக்கும் காட்டிக்கொண்டிருக்கிறன்.

சனங்களை வென்று விழுத்திய
தன் வீரக் கதைகளை அவன் அளந்துகொண்டிருக்கிறான்.
தன் வீரப்பாடலை
வானத்தில் பாய்ச்சி முழு நிலத்தையும் நனைக்கிறான்.
குழந்தைகள் செல்ல
மறுக்கப்பட்ட பகுதியில் மரணம் கசிந்து பரவ
எலும்புக்கூடுகளை கால்களில்
கட்டிய பேய் மகளிர் தங்கள் நடனங்களை ஆடுகிறார்கள்.

வீரப்பாடலின் அரசன் கால் வைக்கிற இடமெல்லாம்
மரணமும் குருதியும் நசிபடுகின்றன.
குரல்கள் சல சலத்து அடங்க மண்ணால் மூடப்பட்டிருக்கிறது.
வீழ்ந்தவர்களின் கதைகளையும்
வீழ்த்தப்பட்ட முறைகளையும் புகைப்படங்களாக
வெளியிட்டுக்கொண்டிருக்கிறான்
அரசனால் அங்கு நிறுத்தி
வெற்றி வாகை சூடப்பட்டிருக்கிற இராணுவீரன்.

பெருநிலம் காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
_____________________________
09.12.2009
நன்றி:  பொங்குதமிழ்

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...