Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 20 மார்ச், 2010

குழந்தைகள் ஆசைப்படுவது என்ன?

o தீபச்செல்வன் ----------------------------------------


குழந்தைகள் அரசனின் கேள்வியிலிருந்து
தங்களின் விரிந்த விடைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
குழப்பமாக நீட்டப்பட்டிருக்கிற தெருவில்
அனைத்துக் குழந்தைகளும் கைகோர்த்தபடி கேட்கிறார்கள்
குழந்தைகள் ஆசைப்படுவது என்ன என்று?
தான் கேட்டுக்கொண்டு
அரசன் குழந்தைகள் ஆசைப்படுவது
தான் தரும் காலம் என்கிறான்.
அது வளமானது என்றும் சுதந்திரம் சமத்துவம் கொண்டது
என்றும் சொல்ல குழந்தைகள்
அரசனின் சொற்களிலிருந்து கேள்விகளை தொடங்குகின்றனர்.

அரசன் தன் எல்லாச் சொற்களிலும் அதிகாரம் பெருகுகிற
தன் புன்னகையை பூசி விட்டிருக்கிறான்.
குழந்தைகள் அஞ்சும் பயங்கரமான முகத்தை
அவன் குழந்தைகளை நோக்கி திருப்புகிறான்.
குழந்தைகளின் உலகத்தை
சுருட்டும் தன் புத்திகளால் வடிவமைத்த புத்தகத்தில்
அவன் குழந்தைகளைப் பற்றியே பேசுகிறான்.

குழந்தைகளிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்தவன்
அவர்கள் துயரடைந்து போயிருக்கிற
அச்சமான காலத்தை வனைந்தவன்
குரூரங்களின் வளமான காலத்தை குழந்தைகளுக்கு
பரிசளிக்கப்போவதாக சொல்கிறான்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.

எல்லாவற்றையும் நிர்மூலமாக மூடியிருந்து
புன்னகையை சிதறடிக்கும் அதிகாரத்தை
இயல்பை தின்று தந்திரங்களால்
சிறைப்பிடித்திருக்கிற நோக்கங்களை
சாபங்களை பரிசளித்து சரித்திரங்களை அழித்து
விரிந்திருக்கிற எண்ணங்களை
குழந்தைகள் ஆசைப்படவில்லை.
அரசன் தன் விடைகளால் குழந்தைகளின் மனதையும்
தன் புன்னகையால்
அவர்களின் கண்களையும் காயப்படுத்திக்கொண்டேயிருக்கிறான்.
_________________
நன்றி :  சிக்கிமுக்கி இதழ் 03

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...