Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 27 மார்ச், 2010

துயர் மிகுந்த காலத்தை கடந்த அருளம்மாவின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


அழிவினால் தன் காலங்கள் முழுவதையும்
இழந்த மூதாட்டியின் நேர்காணலில்
உறைந்து போயிருக்கின்றன சொற்கள்.
அருளம்மாவின் குரல்களில் அடங்கியிருந்த வாழ்வின் கனவை
தீராதிருக்கும் தன் பசியை
அவர் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பயங்கரமான நிமிடங்களிலிருந்து தப்பித் திரும்பிய
அருளம்மா தன் கண்களில்
கடவுளை நிறைத்து வைத்திருக்கிறார்.
பேரழிவுகளின் நிலத்தில் கதிரையில் அவளின் காலங்களை
ஏற்றி கொண்டு வந்திருக்கிறார்கள்.
கடவுளின் அளவை மீறிக்கொண்டிருக்கின்றன
அருளம்மாவின் அடங்காத பிரார்த்தனைகள்.
ஏமாற்றங்களால் முடிந்துபோன வாழ்வின்
சொற்களில் உறைந்து போயிருக்கிறது வாழ்வுக்கான கனவு.

யுத்தத்தின் கொடிய அனுபவங்களால்
அவள் வைத்திருக்கும் கதைகளும்
சிதற மறுத்த அவளின் உடலும்
அடங்க மறுத்த நீளமான நிரம்பிய உயிரும்
தீராத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
அவலத்தின் பெருங்கதையை
குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்
யுத்தத்தை வென்ற மூதாட்டி.
அருளம்மா நிறைவேறாத
கனவுகளைப் பற்றியே குழந்தைகளுடன் பேசுகிறாள்.
__________________
நன்றி :   பொங்குதமிழ்

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...