Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 4 அக்டோபர், 2007

மரணத்துள் வாழ்வோம்

_____________________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_____________________________

நாங்கள் எல்லோரும்
மரணங்களைச் சுமந்தே
வாழ்கிறோம்
எனது அப்பாவின் மரணம்
மர்மமானது
எனது அக்காவின் மரணம்
பரிதாபமானது
மரணங்களுக்குள்
நீதியை சமன்செய்த
எனது அண்ணாவின் மரணம்
மகத்துவப்பட்டு வாழும்
மற்றொரு விதமானது.

எல்லோரும் மரணங்களைச்
சுமப்பது
அந்நியக்குணங்களின்
கறுப்பாக்கப்படுதலுக்கான
தேசத்தின் மீதான குறி.

மரணங்களில் சிலர்
வாழ்கிறார்கள்
அந்த ஒவ்வொரு
மரணங்களிலும்
ஒரு சுதந்திர உலகம்
நிகழுகிறது
வேறுபக்கத்தில்
சமிக்காது தேங்கியிருக்கும்
அழுகைப்பட்ட
மரணங்களின் மொழிகளை
சுவைத்துப் பார்க்கிறேன்
அவைகள்
மரணங்களின் விதிகளை
நொந்து அழுகின்றன.

நானும் சுயக்கல்லறையில்
மரணித்து வாழ்கிறேன்
பிணமாகி
உதிராதபடி நடமாடுகிறேன்
கிழித்துப்பறிக்கப்பட்டு
கறுப்பாக்கப்படும்
அதே தேசத்தில்.

அந்நிய முகங்களின்
கோரப்புன்னகைகளை
வலிந்து
சுவைக்க இயலாமலும்
அதிகாரக்குரல்களை
சமிக்க இயலாமலும்
இறுகியிருக்கிறது
ஆன்மாவின் இயக்கம்.

இப்போது வலிந்து
எம்மீது சுமத்தப்பட்ட
மரணங்களை
தொடர்ந்தும் யாரும்
தலையில் சுமந்து
போகக்கூடாது
பொதுமைப்பட்டு
பரவமுனையும்
வலியின் கோரகுணத்தை
திருக பாரம் தரும்
விதிப்பட்ட மரணங்கள்
மற்றொரு விதத்தில்
நிகழட்டும்
எங்களுக்கே உரிய
சுதந்திர உலகத்தை விரித்து.
---------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...