Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

கிராமங்களின் பாடல்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________


கரங்களில் கேட்பதில்லை
கிராமங்களின் பாடல்
குடிசை முகத்துடன்
கிராமங்கள்
நீண்டுகொண்டு போயின
அங்குதான்
காற்று வசிக்கிறது.

புதுமைகளை
நாகரிகங்களை
ஆதியில்
கிராமங்களே பிரசவித்தன
கிராமங்களின் ஜீவனில்
நகரங்கள் நடமாடின
கிராமங்களின் செய்தி
எங்கும் கேட்காமல்
குடிசையில் மண்டிக்கிடக்கிறது.

நகரங்களில்
வருத்தங்கள் மனிதரோடு
உலவுகின்றன
மின் கம்பங்களின் சுற்றில்
மனிதர்கள்
நிம்மதியை தொலைத்து
திரிகிறார்கள்.

கிராமங்களில் விளக்குகள்
நிரம்பிய குடிசைகளில்
இருள் நிரம்பிய
புத்தங்களின் குரல்கள்
தேங்கிக்கிடக்கின்றன.

நாகரிகங்கள்
மனிதரை
கருனையை
கொன்று தீர்த்தன.

கிராமங்களிடம்
நதி இருக்கிறது
நதியின் தாகத்திற்கு
கிராமம் அருக்கிறது
நதியைப்போல ஆறுதல் இல்லை
நதி தாயைப்போல
கிராமங்களை வளர்த்தன

கிராமங்கள்
மனிதர்கள்
நாகரிகங்கள்…எல்லாம்
நகரங்களாகியபோது
கிராமங்கள் துரத்தப்பட்டன.

நைல் நதியை விடவும்
குவாங்கோ நதியை விடவும்
எனது நதி மேலானது.

படையெடுத்து பெயர்க்கப்பட்ட
நதிக்கிராமங்களைப்போல
எனது கிராமம் விழுங்கப்படக்கூடாது.

கிராமங்களின் விடுதலை இருள்
கிராமங்களின் அமைதி நிழல்
கிராமங்களின் வலிமை ஒளி
கிராமங்களின் வெள்ளை பசுமை
எல்லாவற்றிலும்
எனது தோற்றம் பிணைந்து கிடக்கட்டும்
நதியில் பசியாறலாம்.

பசுமை வழியும்
கிராமத்தின் முகத்துடன்
நமது ஆயுள் தீரும் வரை
பசியாறுவோம்
கிராமங்களின் தெருவில்.
---------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...