Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 19 அக்டோபர், 2007

அப்பாவின் குளக்கரை..

_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________



னக்கு தேவாரம்
பாடத்தெரியவில்லை
அப்பா குளிக்க மூழ்கிய
குளக்கரையின்
ஏதிர்த்திசையில்
ஆவதானிக்கிறேன்
ஞானப்பாலூட்டுவதற்கு
கடவுளோ
அவரின் மனைவியோ
வருவதாயில்லை..

நான் தொடர்ந்து
அழுது பார்க்கிறேன்
எனது அழுகையின்
பக்கத்தில்
பலரும் போய்வருகிறார்கள்
என் அழுகை குறித்து
விசாரிக்க எவருமில்லை
அவரவர்
தங்கள் வண்டிகளில்
பார்வைகளை செலுத்தியபடி
அதை ஓட்டிப்போகிறார்கள்..

எனக்கு தாகமெடுக்கிறது
ஞானப்பால் குறித்த
நினைவுகளில்
இப்போது
தேனீர் வண்டிக்காரனின்
சில்லரைக்காசுகளின் சத்தம்
வியாபார முழக்கமிடுகிறது...

அந்த தேனீர் வண்டிக்காரனும்
கடவுளாகவோ
அவரின் மனைவியாகவோ
இருக்க முடியாது..

மூன்று வயதின்
ஞானப்பால் நினைவை
அந்தக் குளக்ரையில்
வீசியிருக்கிறேன்..

இப்பொழுதும் அந்த வழியில்
போய்வருகிறேன்
அப்பா குளித்து
கரையேறாத
அந்தக் குளக்கரையில்
எனது பார்வைகளை
செலுத்துவதில்லை..
------------------------------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...