Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 17 அக்டோபர், 2007

பசுமைகள் தலைசிதறின

--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


ந்தத் தென்னை மரத்தின்
தலை சிதறியிருந்தது
அதன் உடல் எல்லாம்
கிழிந்து
இரத்தம் கொட்டியது
துயரத்தை ஏற்றிய
கொடிபோல
அது நின்றுகொண்டிருந்தது.

வீதிகளில் பசுமை
வறண்டுபோய் கிடந்தது
கடைகிளில்
குடிப்பதற்கு குருதிறே
அதுவும் விற்பனையில்..
சதைகதைராசில் போட்டபடி
சிதறிய தலைகளுக்கு
விவாதிதித்தார்கள்.

பசுமை கவிதைகளை
விற்கவந்த நாடோடிகள்
முகங்களை உடைத்து
அழுகைகளை சம்பாதித்தனர்
சிரித்தபடி வந்தவர்கள்
அழுகை கொண்டே போனார்கள்.

அவர்கள் வந்து பார்த்தார்கள்.

எல்லோரும் இரைச்சலுக்காக
விழுந்து கிடந்தோம்
சிலர் சிழுந்த இடங்களிலேயே
கல்லறை எழும்பியது
உறவுகளும் மகிழ்வுகளும்;
தலைசிதறி மயானமாய் கிடந்தன.

என் இரண்டு வயது
பிள்ளையும்
பதுங்கி கிடந்த இடத்தில்
நடு கல்லாயிருந்தாள்
அவளை அணைத்தபடி
என் பசுமையும்
தலை சிதறி கிடந்தது

அதையும் அவர்கள்
பார்த்திருக்க வேண்டும்.



அந்த நெரிசலில்
அவர்கள் என் தொலைந்த
பசுமையை தேடித்தர இயலாது.

போகும் போது
பிணங்களை விலக்கியே
அவர்களால் போக முடிந்தது.

அவர்கள் வரும்போது
நான் நம்பினேன்
எல்லாம் பசுமையாய் இருக்குமென்று

இருந்தாலம்
அவர்கள் நெடுகபார்ப்பார்கள்
போன பிறகும் பார்ப்பார்கள்.

தலைசிதறித்தெரியும் - அந்த
தென்னைமரத்தின் வழியே
தேடப்படும் எங்கள் பசுமையை
-----------------------------------------
09.11.2006 அன்று வாகரையில் பாடசலை-அகதிமுகாம் மீது இலங்கை இராணுவம் நடத்திய எறிகனைத்தாக்குதலில் 50க்கு மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
-------------------------------------

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...