Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 29 ஆகஸ்ட், 2007

வீடும் தெருவும்

_______________________
எழுதியவர்:தீபச்செல்வன்
_______________________

எப்பொழுதும் எனது
கையிற்குள்
பிடிபட்டுக்கிடக்கும்
காலுக்குள்
மிதிபட்டுக்கிடக்கும்
எனது சைக்கிளை
மறந்து
கடைத்தெருவில் நிறுத்திவிட்டு
நடந்துபோகிறேன்.

நடைவலித்துக்கொண்டிருந்தாலும்
தெருவின் மணத்தில்
வித்தியாசம் தெரியாமல்
நடையை ரசிக்கத்தூண்டும்
செருப்பை மறந்து
முட்களில்
நடந்துகொள்ளவும்முடியும்
இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தாலும்.

எனது தெரு
சுதந்திரமான நடை
தெருக்கரை மரங்களின்நிழல்
வீட்டை கடந்து
அலுவலகத்தை கடந்து
மறந்தபடியும் போகலாம்
தெருவும் ரசனையும் நீளும்.

எதுவரையும் போகலாம்
எங்கும் எனதுவீடு
எப்பொழும்
தெருவில் உலவலாம்
எப்பொழும்
வீடு வந்து சேரலாம்.

பள்ளிக்கூடத்திற்கு போய்
பிள்ளை
வீடு வந்துசேரமாலிருக்கவும்
எனது மனைவி தேடமாட்டாள்
அவன் வருவான்
இன்னும் படிக்கிறான்
பிள்ளையின் வரவில் இன்னும்
எதிர்பார்ப்பும் விசேஷமும்இருக்கும்.

பால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
தபால்க்காரன்
உரியநேரத்துக்கு வருவான்
பத்திரிகை
உரியநேரத்துக்கு வெளிவரும்
கடைகள் உரியநேரத்துக்கு
திறந்து வியாபாரம் நடக்கும்.

எங்கே உங்கள் செருப்பு
எங்கே உங்கள் சைக்கிள்
என்றெல்லாம்
எனது மனைவி கேட்கமாட்டாள்
எப்பொழும்
கதவுகளும் ஜன்னல்களும்
திறந்துவிட்டபடி
காற்றில் மிதந்து
இயற்கையை
ரசித்துக்கொண்டிருக்கும்
எனதுவீடு.

சைக்கிள் ஞாபகத்திற்கு
வரும் பொழுது
கடைத்தெருவரை
நடந்துபோய்
எடுத்துக்கொண்டு போகலாம்
பயணத்தில் தடையிருக்காது.
____________________________________

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...