Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 16 ஜூலை, 2007

அழிக்கப்பட்ட படகுத்துறை கிராமத்தின் கண்ணீர்வெறி.

------------------------------------------------
எழுதியவர்:தீபச்செல்வன்
--------------------------------------------------------------------இது தாக்குதல் நடந்த படகுத்துறை

-------------------------------------------------------------------

அதே குரூரப் பறவையின் வெறியில்
இன்னொரு கிராமமும் சிதறியது
இன்னும் கூச்சலிட்டு
அழுது அழைக்கிறது
படகுத்துறைக்கிராமம்.

அழுகை சலித்துப் போகிறது
எத்தனை சிதறிய கிராமங்களின்
கவிதைகளின் தலைகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
எதுவரை மரணத்தின் நாக்கு
விமான முகங்களில்
அசைந்தபடி
கிராமங்களை கிழித்துப்போகும்.

எந்தப்பதிலுமற்றுக்கிடக்கிறது
கிராமமும், அடுக்கப்பட்ட
பிணங்களும்
சிதறிய கிராமங்கள்
தெரிந்தே குரலிட்டன
அவர்கள் குண்டுகளால்
அரசியல் யாப்பு செய்தவர்கள்
நச்சு வாயுகளால்
இதயம் கொண்டவர்கள்.

இப்போதும் இதிலும்
இவைகளைப் பார்த்தும்
அவர்களால் மறுப்புக் கூற முடிகிறது
கண்ணைக் கட்டிக்கொண்டு
கோழை முகத்துடன்
அதே புன்னகையால்
குரலை உயர்த்தி
பதில் வாசிக்க முடிகிறது
கிராமங்களை விழுங்கிய திருப்தியுடன்.

அவர்களால் முடிவது
பிணங்களின் கண்காட்சியை
நடத்தவும்
சவப்பெட்டிகளை சமரசத்துடன்
வழங்கவும்
சுய உரிமையின் பெயரால்
சிதறிய எங்களைக் குவித்த
ஆட்சி பீடத்திலிருந்து
தங்களை இனம்காட்டியபடி.

படகுத்துறை கிராமத்தையும்
அமைதிப்படுத்தி
தீர்ப்பெழுதி குறிவைத்து
குற்றம் பூச முடிந்தது
அது பெண்களையும்
குழந்தைகளையும்
அதிகமாய் பலிகொடுத்த
பாரத்துடன் செய்திக்காக கிடக்கிறது.
__________________________________
02.01.2007 இந்த தாக்குதலில் பதினைந்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகினார்கள். சிறுவர்கள் கால் முதலிய அங்கங்களை இழந்தார்கள்.
___________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்


0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...