Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 16 ஜூலை, 2007

என்னைப்போலவே தகனிக்கப்பட்டவர்கள்.

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________


நான் மரணத்தின் குறையிலிருந்து
மீண்டுகொண்டிருக்கிறேன்
கனவின் சுடுகாட்டின்
புதைகுழி ஒன்றிலிருந்து
அல்லது
சாம்பல் மேட்டில் இருந்து.

புதிய நாக்கு ஒன்றை சிருஷ்டித்து
பேசும் ஒரு பொழுதுக்காக.
மரணத்தில் அல்லது தகன வெளியில்
புரண்டு அவதிப்பட்டு
நித்திரை இல்லாமல் விழிகளைக் கசக்கி
உயிரின் இருள்வெளிக்குள்
திரிந்து அலைந்து இயலாமல்
எழும்பி வருகிறேன்
வலி கரையும் நினைவிற்காய்.

நிலவின் வெளிச்சத்தை
பார்த்துக்கொண்டிருக்க ஆசைப்பட்டேன்
இருட்டில் புதைகுழி தோண்டி
புதைக்கப்பட்டேன்
சூரியனின் ஒளியை
சுவாசிக்க ஆசைப்பட்டேன்
நெருப்பால் எரித்து வீசப்பட்டேன்
கடலின் ஈரத்தில்
உலவ ஆசைப்பட்டேன்
நீர் இன்றிய ஆழத்தின் உஷ்ணத்தில்
தகனமாக்கப்பட்டேன்.

தாகங்களின் நினைவை அழித்து
சவப்பெட்டி செய்து
என்னை நிரப்பிக்கொண்டார்கள்.

எனது வாயின் அசைவுகளை
எவரும் கண்டுகொள்ளவில்லை
பள்ளிக்கூடத்திற்கு அல்லது கடைத்தெருவுக்கு
போகும் சிறுவனின் அலம்பலைப்போல.

புற்களில் மேய்ந்து உலவிக்கொண்டிருந்த என்னை
பண்டிகை ஒன்றின் மதிய போசன விருந்திற்கான இறைச்சிக்கு
வளர்க்கப்பட்ட ஆட்டுக்கடாவைப்போல்
முடிவை எழுதி பிரகடனப்படுத்தினார்கள்.

இனந்தெரியாத சடலமாக
எறியப்பட்ட எனது தெருவில்
இராணுவ சப்பாத்துகளின் கீழே
அரசாங்க செலவில்
அடக்கம் செய்ய
ஜனாதிபதி உத்தரவிடட பொழுதில்
ஆட்சி
வருடத்தை பூர்த்தி செய்தது
ஆயிரத்துநானூற்று ஐம்பத்துநான்கு
புதைகுழிகளை அடைந்து.

ஒரு துப்பாக்கியையும் சைனைட்டையும்
அணைத்தபடிதான் கரைந்துபோக வேண்டும்.

புதைகுழியில் அல்லது சாம்பல் மேட்டில்
ஒன்று மட்டும் எஞ்சிக்கிடக்கிறது
எனது அப்பாவித்தனம் அல்லது
குழந்தை போன்ற சிரிப்பு.
----------0-------------------0------------------------
20.11.2006
_____________________________________
மீள்எழுத்து:நன்றி:எரிமலை.தினக்குரல்

2 கருத்துகள்:

இனியவள் சொன்னது…

இதை வாசிக்கையில் என் மனம் என்னிடம் இல்லை..............

நன்றி

பெயரில்லா சொன்னது…

அண்ணா,உங்கள் கவிதையை வாசிக்கும் போது எனது மனதில் ஆழ்ந்து பதிந்துள்ள நினைவுகள் மீள்கின்றன.

eelam.mywebdunia.com

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...