Showing posts with label த.அகிலன். Show all posts
Showing posts with label த.அகிலன். Show all posts

Wednesday, July 11, 2007

த.அகிலன்கவிதை

__________________________
எழுதியவர்:த.அகிலன்
_________________________
என்னிடம்
மகிழ்ச்சியின்
சொற்கள் தானுமில்லை..
--------------------------------------------

என்னால்
உலர்ந்துபோன
இரத்தத்தின்
அடியில்
ரோஜாவின் இதழ்களை
கற்பனை செய்ய
முடிகிறது.

பூக்களிடம் தொலைந்துபோன
இயல்பைப்போல்
நேற்றுப்பிடுங்கியெறியப்பட்ட
பெருமரத்தின்
மொட்டுக்களையும்
பிஞ்சுகளையும் குறித்த
துயர்மிகும்
சொற்கள் மட்டுமே
இப்போது
என்னிடமுண்டு.

அழகுதிர்ந்த கவிதை
துயரமும்
பிணமும் நாறிக்கிடக்கும்
தெருவழியே
அழுதலைகிறது.

குருதியூறிய சிங்கத்தின்
வேட்டைப்பல்லிடுக்கில்
அழுகிநாறும்
எம் குழந்தைகளின்
இளந்தசை.

கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத்தவிரவும்
வேறென்னதான்
இருக்கமுடியும்.
______________________________________
நன்றி:எரிமலை