தீபம்

செவ்வாய், 27 நவம்பர், 2018

புலியென உறுமும் பெருந்தீ




நாரை தலைகுனிந்திருக்கும்
எல்லாப் பூக்களும் சிவக்கும்
ஒரு பறவையாய் அசையும் நிலத்திற்
புரள்வாள் தாய்
வானம் மண்ணில் உருகித் தீரும்
காந்தளின் விழிகள் கசியும்
சிறகுகளில் விளக்குகளை சுமந்து
துயில் நிலங்களை வட்டமிடும்
பறவைகள் வரையும் தேச வரைபடத்தை
எல்லோரும் குரலெடுத்து அழைப்பர்
தாய் நிலம் கேட்டு
கல்லறைகள் கண் விழிக்கும்
வீரத் தலைவனின் பேருரை கேட்க
ஒரு புலியென உறுமும் தேசம்
மிலாசும் பெருந்தீ.
¤


தீபச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இணையுங்கள்