Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 31 அக்டோபர், 2018

பயங்கரவாதி

   


பனை மரங்களை பிடுங்கி
கித்துல் மரங்களை விதைப்பாய்
என் பூர்வீக வீடுகளை சிதைத்து
இராணுவ முகாங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

ஆலமரங்களை வீழ்த்தி
வெள்ளரச மரங்களை நடுவாய்
என் ஆதிச் சிவனை விரட்டி
புத்தரை குடியேற்றி
எனை பயங்கரவாதி என்பாய்


எனதுடலை நிர்வாணமாக்கி
இராணுவச் சீருடையை போர்த்துவாய்
எனது வீரர்களின் நடுகற்களை உடைத்து
உனது வெறிச் சின்னங்களை எழுப்பி
எனை பயங்கரவாதி என்பாய்

பிழையாய் எழுதியென் மொழியை அழித்து
உனது மொழியை திணிப்பாய்
எனது பாடல்களை அழித்து
புரியாத உன் பாடல்களையென் செவிகளுக்குள் சொருகி
எனை பயங்கரவாதி என்பாய்

எனது நிலங்களை அபகரித்து
உனது பெயர்களை சூட்டுவாய்
எல்லைகளை மெல்ல மெல்ல அரித்துண்டு
எனது தேச வரைபடத்தை
வரையுமென் கைகளுக்கு விலங்கிட்டு
எனை பயங்கரவாதி என்பாய்

ஆம், சிங்களத் தோழனே!
குழந்தைகளின் நிலத்தை காப்பவன்
பயங்கரவாதி எனில்
குழந்தைகளின் பூக்களை சேமிப்பவன்
பயங்கரவாதி எனில்
நான் பயங்கரவாதிதான்
இது பயங்கரவாதிகளின் பூமிதான்.
¤

■தீபச்செல்வன்

புதன், 24 அக்டோபர், 2018

இராணுவத்தினாலான தேசம்!





முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது
இப்போது இராணுவத்தினாலானது
எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள்
எனது வீட்டின் தளபாடங்களிலானது

எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே
பூவரசம் தடிகளில் செய்த வில்லினால்
இராணுவமுகாமை நோக்கி
அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன்.

பனியும் வெயிலும் தின்று தீர்த்தது
குழந்தையரின் புன்னகையை
எனினும், வாடிய மலரைப்போல
மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில்
அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர்

துப்பாக்கிகளுக்கு அஞ்சாது
வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்றனர் எம் பெண்கள்
வற்றாப்பளைக் கண்ணகிபோல
போராளிகளின் கதைகளில் வரும் நாயகிகள் போல

பள்ளிக்கூடம் செல்ல மறந்தவெம் சிறுவர்கள் பாடினர்
நிலம்மீதான பாடல்களை
கற்றனர் எப் பள்ளியும் கற்க முடியாத பாடத்தை

ஆக்கிரமிப்பு எதிரிப் படையே
கவர்ந்தவெம் நிலங்களை விட்டு உடனே வெளியேறு
இனி எனது தேசம்
கடலாலும் ஒரு பகுதி நிலத்தாலும் சூழ்ந்திருக்கட்டும்!
0

-தீபச்செல்வன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...