Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 28 பிப்ரவரி, 2018

ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை



தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன்
வீதியில் செல்கையில்,
சலவை தூளால் தோய்த்து
உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத
வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி
நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை,
திருடன் என்றோம்
மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த
வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு.
தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை
இரண்டு கவளம் அரிசிக்காக
குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம்.
கனிகளை எமக்குப் பரிசளித்தவனை
ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி
கனிகளை எமக்குப் பரிசளித்தவனின்
உடலைக் கிழித்து
பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்டோம்
ஒரு வாழைப்பழத் துண்டையும்
சில காட்டுப் பழங்களையும்.மீந்திருந்ததுவோ பூமியை இழந்த
ஆதிவாசியினது இருளும் பசியும் படிந்த கண்களும்
கோதுமை என சந்தேகிக்கப்பட்டு
தேகம் எங்கும் அப்பியிருந்த
அழுக்கு எனப்பட்ட வனப் புழுதியும்.

- தீபச்செல்வன்

கேரளாவில் அருசி திருடியதாக கூறப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மதுவுக்காக

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...