Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 27 நவம்பர், 2017

இனி எம் கல்லறைகளுடன் பேசுக!



எம் இருதயத்தை பிளந்த
யுத்தக் கல்லை பார்த்ததுபோதும்
எமை கொன்று வீசிவிட்டு
வெற்றிக் கூச்சலிடும்
உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்
எம் தேசமழித்து
அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே
ஒற்றை நாடென நடனமாடும்
வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.
எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு
வருகவெம் சிங்களச் சகோதரர்களே!
வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும்
நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய
பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும்
மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன்
போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும்
மாண்டவர்களின் துயில் கலைத்து
உறங்க இடமறுத்த மாண்பை பார்க்கவும்
சற்று அமர்ந்தே
எங்கள் கல்லறைகளுடன்
பேசுக எம் சிங்கள சகோதரிகளே!
உடைபட்ட கல்லறையின் துகளொவ்வொன்றும்
எம் தாகம் எடுத்துரைக்கும்
எம் தலைமுறையின் கனவைச் சுமந்திருக்கும்

-தீபச்செல்வன்


செவ்வாய், 21 நவம்பர், 2017

கத்தலோனியா மூதாட்டி






தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி ஒருபோதும் உங்கள் பாடல்களைப் பாட முடியாது' என்ற
ஸ்பானிய அரசனின் வார்த்தைகளை எழுதிய
பழைய நாட்குறிப்பை தன் கைப்பையில் வைத்திருந்த அந்த மூதாட்டி
'மகளே! மாண்டுபோன பின்னர் எழும் நினைவுக்கல்லில்
எழுதுவதற்கு மாத்திரம் உரியதல்ல எம் தாய்மொழி!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

'இனி உலகில் ஒரு நாடு சாத்தியமில்லை' என
பிலிப் மன்னன் எக்காளமிடுகையில்
பொக்கை வாய் நிறைய சிரித்த அந்த மூதாட்டி
'மகனே! வஞ்சிப்பவர்களின் கைகளில்
ஐக்கியத்தின் வாசனை இருப்பதில்லை
நம்முடைய பூர்வீக இராட்சியமே பாரபட்சத்தின் முடிவு!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

சுதந்திரத்தைத் தவிர
எதனாலும் பெறமுடியாத புன்னகைகயை கொண்டிருக்கும்
ஒவ்வொரு கத்தலோனிய முகங்களிலும்
இன்னும் துடிதுடிப்போடு திரியும் அந்த மூதாட்டி
'புதல்வர்ககளே! நாம் ஸ்பானியர் அல்ல, கத்தலோனியர்
என்பதை வரலாறு மறந்து போனால்
உம் குழந்தைகளின் பெயர் அகதி என்றே முடியும்' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.


♢ தீபச்செல்வன்

நன்றி: கல்கி

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...