Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

வீர நாய்கள்



எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி
மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும்
அழைக்கப்படும்போதெல்லாம்
சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும்
எனது வீடுகளில் எந்த வேளையிலும்
சோதனைகள் நடத்துவதையும்
அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி
என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும்
எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும்
எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும்
எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன்
பார்த்துச்செல்லும்போதும்
துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின்
மரணத்தின் சந்தேகத்தையும்
இன்னுமின்னும் எல்லாவற்றையும்
சகிக்கப்பழகிவிட்டேன்
எத்தனையோ தடவை ரோந்து சென்றுவிட்ட பின்னும்
இராணுவத்தைப் பார்த்து குரைக்கும்
என் வீட்டு நாயிற்க்குத்தான்
இன்னும் சகிக்கத் தெரியவில்லை.

தீபச்செல்வன்

நன்றி: குங்குமம்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லெப்டினன் மாலதி


பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா

ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை
உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை
எழுந்தாள் தேசம் காக்க
தரித்தாள் ஆயுதம்

கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி
தொண்டைக்குழியில் நஞ்சு
'என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!'
என்றுரைத்த அவள் இறுதிக் குரல்
இன்னும் ஓயவில்லை

போருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்
தொடுத்தனர் போர்
அழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்
அழித்தனர் எமை

பாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்
களத்தில் அவள் மாண்டுபோகையில்

உம் கைகளிலிருந்த துப்பாக்கிகளில்
அசோகச் சக்கரம்
அமைதிப் படைகளின் முகத்திரையை
கிழித்தெறிந்தாள் முதல் சுடுகலனில்

வானமே கரைந்துருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்டது
முதல் விதை.
0

தீபச்செல்வன்

10.10.1987 தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து ஆயுதம் ஏந்திக் களம் சென்று போரிட்டு மாண்ட மாலதி என்று அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற முதல் பெண் புலிக்காய்.

திங்கள், 2 அக்டோபர், 2017

குர்து மலைகள்


பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்

குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்

லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.

ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.

●தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...