Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தேசியப் பாடகன்



இன்றும்
எதிரிகள் உனது குரலுக்கு அஞ்சினர்
எதிரிகள் உனது பாடல்களுக்கு அஞ்சினர்

ஆனாலும்
இருதயம் வெடித்து முழங்கின
வீர யுகமொன்றில் நீ இசைத்த பாடல்கள்

உள்ளே நெருப்பெரியும் குரலில்
தாய் மண்ணை நிறைத்த
தேசியப் பாடகன் செல்கிறான்
தொலை தூரத்திலிருந்து
தேசத்தின் பாடலை இசைக்க.

குரலற்றவர்களின் பாடலைப் புதைத்தோம்
மாபெரும் தாகம் நிரம்பிய மண்ணில். 

சாந்தனுக்கு

தீபச்செல்வன்

சனி, 18 பிப்ரவரி, 2017

Keppapilavu/ கேப்பாபுலவு/ ஆங்கிலத்தில்/ க. வாசுதேவன்


------------------------------------------
***
In the past, my country was made of the sea,
And now it is made of the army.
Military camps set up on the remains of my past
Are made of the materials of my dwelling.

With the bow made of the stretched stick of the Portia tree,
Near Nanthikadal which never fell,
The boy from Keppapulavu pulls
Towards the military camp

The dew and the sun have devoured
The beautiful smile of children.
However, as well as faded flowers,
They sleep in the hanging cradles,
Surrounded by invaders

Our wrathful women are insurgent
Without fearing the guns
As well as the Goddess Kannaki of Vattapolai
And lyric characters of poems written by fighters

Our children who forgot to go to school learned
And sang the songs on Keppapilavu,
So they learned what they can not learn anywhere.

Oh ! You, the enemy regiment of invasion,
Leave our lands which you have taken possession of!
May my country be surrounded by the sea, and, in a part, by land!

(first attempt )

Ather : Theepachelvan
Translation : K. Vasudevan

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பூவரசம் பூ!



குருதி நிணம் தீரா மண்
பிணங்களும் எஞ்சாத தேசம்
சிதைமேடுகள் மீதும் துப்பாக்கி
சிதலுறூம் காயம்

இராணுவ சப்பாத்துக்களின்
கீழ் எல்லாமும்

ஆனாலும் எழுந்தது தேசம்
அதனாலும் எழுந்தது தேசம்
சிறகுடைத்து வீசப்பட்ட
ஒரு பறவையின்
சிறகசைப்பைப்போல

கால்களற்றவரும் நடந்தனர் தெருவில்
கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை
விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை
சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை
இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து

தொண்டைக் குழிகளில்
நெடுநாளுறைந்த
பெருங்குரல்
காட்டாற்றைப்போலப் பெருக

இப்போதும்
வீழ்த்தப்பட்டவர்களின்
பெருஞ்சொற்களில் கனன்றது
வாழ்வின் கனவுதான்
பிரளயம் கடந்து
ஊழி கடந்து
அகல விரிந்து பூத்த
பூவரசம் பூப்போல.

¤

தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...