Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 29 செப்டம்பர், 2016

நீர்ப்பறவையின் கேலிக் கோடு




மீன்களை தரையில் எறிவதைப்போல
தொலைதூரம் வீசியெறிந்து
உன்னையும் நாம்தான் கொன்றோம்

புலத்தில் தந்தையர்
நிலத்தில் குழந்தையர்
வழிகளில்
ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும்
காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும்

கீவ் நகரை கடந்தவனைக் காணாது
ஊசியிலை காடுகளும் துடித்தன
போலாந்து எல்லையில்
வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர்
துயரப்பிக் கிடக்கின்றன
உன் கேலியின் கோடுகள்

கூடுகள் பறிபோயிருக்கலாம்
இரையற்று பசியில் மரிக்கலாம்
எல்லாப் பறவைகளும்
வலசைகளாயிருப்பதில்லை

ஆழ்கடலில் குழந்தைகளை
சுமந்தபடி அலைந்து
புகலிடம் நெருங்காது திரும்பிய
சிறு படகைப்போல

தன் தாய் மண்ணிலிருந்து
தூக்கி எறியப்பட்ட
புலம்பெயரா முக்குளிப்பான் பறவை*
உயிர் நீத்தது
உக்ரைன் காட்டில்.

இரைக்காய் காத்திருக்கும்
உன் குஞ்சின் கண்ணீரில் நனையும்
வறண்டுபோன உன்னுடல்.

அஸ்வின் சுதர்சனுக்கு

தீபச்செல்வன்

*முக்குளிப்பான் பறவை புலம்பெயராத நீர்ப் பறவையினம்

நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்

புதன், 21 செப்டம்பர், 2016

Mein Kind ist ein Terrorist/ எனது குழந்தை பயங்கரவாதி/ யேர்மனிய மொழியாக்கம்





Ich fragte nicht
wie der Frieden aussehen könnte,
als er mir sagte,
„der Frieden blühe aus ihren Gewehren“.

Ich fragte nicht
wie die Sicherheit aussehen könnte,
als er mir sagte,
„aus ihren Augen könne man die sie erblicken“.

Ich fragte nicht
wie die Militärlager und Buddhastatuen aussehen könnten,
als er sagte,
dass sie in unser Land nicht zu besetzen hätten.

Ich fragte nicht
wie er seine Brüder behandeln sollte,
als er sagte,
dass wir alle Bürger eines Landes sind.

Ich fragte nicht
wohin die Gefangenen verschwunden sind,
als er sagte,
dass niemand vermisst wurde.

Ich fragte nicht
wie das Blut auf den Boden kam,
als er sagte,
„keine unserer Frauen wurde vergewaltigt und getötet,
keine Jugendlichen wurden nackt in eine Reihe gestellt
und keinem wurde in den Hinterkopf geschossen“.

Als er sagte,
dass er noch nie jemanden umgebracht hätte,
lediglich nur Terroristen,
da habe ich ihm gesagt,
„mein Kind ist ein Terrorist “.
0

Poem - Theepachelvan

translation - sugirtha shanmuganathan


Der zeitgenössische Dichter Theepachelvan ist eine bekannte Persönlichkeit der Tamilischen Literatur. Das Gedicht „Mein Kind ist ein Terrorist“ ist sein berühmtestes Werk und wird seit der Veröffentlichung rege diskutiert. Übersetzt wurde es von Sugirtha Shanmuganathan, eine in der Schweiz lebende Tamilin.


குறிப்பு 'எனது குழந்தை பயங்கரவாதி' கவிதையை ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டு, தற்போது புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் சுகிர்தா சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நான் பேசுவேன்


எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்

துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்

நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு  ஏற்பவும் சிலர் சொல்லவும் கூடும்

கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?

கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
அவர்களுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்

சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
தீபச்செல்வன்

ஜீவநதி 2014

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

திரும்ப முடியாத நகரம்


¤

என் நகரத்தின் கடைசி தருணம்
அதுவென நினைத்திருக்கவில்லை
உன்னை முத்திமிடுகிறபோது
அது கடைசி முத்தமெனவும் நினைத்திருக்கவில்லை
போருக்கான வார்த்தைகள்
எழுதப்பட்ட நகரத்தில் உன்னை
தனியே விட்டு வந்தேன்.

எப்படி பிரிந்து போயிற்று என் தெரு?
இழப்பின் கொடுமையை
நீதான் முழுமையாக சுமந்திருந்தாய்
நான் உன்னை இழந்து
தனிப் பறவையாய் வீசப்பட்டேன்.

நமக்கு மேலால் நின்ற நாவல் மரம்
முறிந்து போனதை
நீ எனக்கு சொல்லாமலே விட்டிருந்தாய்
நிழலற்றுத் திரிவதை நான் பார்க்கவுமில்லை
நாம் நாவல் மரத்தை இழந்திருக்க
அது வெளவால்களை இழந்துபேயிற்று.

விமானங்கள் வீடுகளை
கவ்விக்கொண்டு போகிறதாக
நான் கனவு கண்டெழும்புகையில்
நீ நமது நகரத்தில் இருந்து
துரத்தப்பட்டாய்
காலையென்பது இழப்புடன்
தொடர்ந்து விடிகிறது.

எனது பேரூந்து திரும்பவில்லை
காத்திருப்பில் நீ அலைகிற துயர்மிகு
தெருவுக்கு நான் திரும்பவில்லை
போர் உன்னை
என்னிடமிருந்து பிரித்துவிட்டது.

யாரிடம் நான் சொல்ல?

உன்னை ஷெல் தின்றுவிட்டது
ஆயுதங்கள் மேலும் குவிக்கப்படுகையில்
போர் தொடரப்படுகிறபோது
வரைபடங்கள் மேலும்
அவதானிக்கபடுகிறபோது
நம்மை குறித்து என்ன இருக்கிறது?

உன்னிடமும்
நமது காதல் நகரத்திடமும்
நான் திரும்பப்போவதில்லை
திரும்பாத நகரத்தை
நாம் இழந்துவிட
நகரம் நம்மை இழந்திருக்கிறது
நகரமிட்ட முத்தம்
இன்னும் காயாமலிருக்கிறது.
¤

12.05.2009

பாழ்நகரத்தின் பொழுது/2009/காலச்சுவடு

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...