Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

من سریلانکایی نیستم! | பாரசீக மொழியாக்கம் | PERSIAN TRANSLATION




برای عبور از مرزها
من ویزا دارم
با گذرنامه اسرائیلی
در دستان یک فلسطینی

برای عبور از بازرسیها
من کارت شناسایی خود را نشان میدهم
همانند یک عراقی که کارت شناسایی یک امریکایی را دارد

برای خرجم
من چندین سکه دارم
همانند داشتن سکه های فرانسوی
با یک فرد سوریه ای

در خاک ما
سرود ملی پخش میشود
همانند سرود ملی هندوستان
که در منیپور پخش میشود

در سرزمین من
پرچم برافراشته شده
همانند پرچم چین
که در تبت خودنمایی میکند

در انگشتان من
اثر مهاجرت یک بی سرزمین مشاهده میشه
همآنند اثرات آتش
در دستان میانمار

Poem- Theepachelvan
Persian Translation- B. Ghasemi

I  AM NOT SRI LANKAN is popular poem in Tamil By poet Theepachelvan. this poem was translation in may languages. This is Persian translation by poet From Iran.
'நான் ஸ்ரீலங்கன் இல்லை!' கவிதை மற்றுமொரு சர்வதேச மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானை சேர்ந்த கவிஞர் B. Ghasemi. பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பாரசீக மொழி ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகின்றது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

நிழற்போர்


பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்
அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்
காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்
காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியே
உன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்
துருவேறிய துப்பாக்கியை

ஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்
அவர்களின் தேவை

பிள்ளைகளைத் தேடும்
எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவே
சிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்
வீழ்ந்து புறளும் தாயே
உன் ஒடிந்த தேகத்தில்
உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியை

ஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்
அவர்களின் தேவை

ஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்
ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்க
அகதிமுகாமொன்றில் தவமிருக்கும்
மெலிந்துருகிய குழந்தையே
உன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியை

ஏனெனில், நம்மை அகதிமுகாங்களில் தடுப்பதுதான்
அவர்களின் தேவை

உடைந்த வாசல்கள் நிறைந்திருக்கும்
விடியாத் தேசத்தில்
மூடா விழிகளுடனிருக்கும்
முதிர்ந்த கிழவனே
உன் வெறுமையான சட்டைப்பையில் திணித்தனர்
மக்கிப்போன குண்டுகளை

ஏனெனில், நம்மை இன்னொரு போருக்குள் தள்ளுவதுதான்
அவர்களின் தேவை

ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய்
களம் புகுந்த போராளியே
நிராயுதத்தை தழுவி நீ கைவிட்ட பீரங்கியை
எடுத்து வருகின்றனர்
இன்னொரு முள்ளிவாய்க்காலுக்காய்

ஏனெனில், நமது போராட்டத்தை போராக்குவதுதான்
அவர்களின் தேவை
0

தீபச்செல்வன்
 

நன்றி - விகடன் தடம்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...