Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Ich bin kein Sri - Lanker/ யேர்மனிய மொழியாக்கம்


Ich bin kein Sri - Lanker

* * *

Um die Wege zu kreuzen,
habe ich einen Pass –
Wie der israelischer Pass
In den Händen eines Palästinensers.

Um Grenzen zu überqueren,
habe ich eine Identitätskarte –
Wie eine amerikanische Identitätskarte
Bei den Irakern.

Um auszugeben,
Habe ich einige Münzen. –
Wie ein Syrischer Bewohner
Mit französischen Euros.

In meiner Heimat,
Wird die Nationalhymne übertragen –
Wie die Nationalhymne von Indien
In Manipur.

In meinem Land,
Wurde eine Fahne gehisst –
Wie die chinesische Fahne
In Tibet.

Auf meinem Daumen,
habe ich eine heimatlose Flüchtlingsunterschrift –
Wie ein Brandwunde
An der Hand eines Myanmars.

Poem - Theepachelvan
translation - aswin shanmuganathan


Hinweis: "Ich bin kein Sri Lanker" - dieses Gedicht wurde von Shanmuganathan Assvin in deutscher Sprache übersetz. Er ist die nächste Generation der Tamilen, der in der Schweiz aufwuchs.

குறிப்பு 'நான் ஸ்ரீலங்கன் இல்லை' என்ற இக் கவிதையை புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்த அஸ்வின் சண்முகநாதன் ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.


நன்றி: பதிவுகள் நான் ஸ்ரீலங்கன் இல்லை/யேர்மனிய மொழிபெயர்ப்பு




வியாழன், 21 ஏப்ரல், 2016

நான் ஸ்ரீலங்கன் இல்லை! - II




-----------------------
வழிகளைக் கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச் சாவடிகளைக் கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல

என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல

என்னுடைய தேசத்தில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல

என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல

தீபச்செல்வன்

நன்றி - ஆனந்த விகடன்
ஓவியம் ஹப்சிகான்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...