Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 30 அக்டோபர், 2015

நாடற்றவர்கள்மீது சரிந்த மலை


ஒளித்து விளையாடும் அம்மாவும்
தெருவும் தேயிலை மலையும் 
மீண்டும் வருமெனக் காத்திருக்கும் 
குழந்தையின் முன்னால் 
குருதியை உறிஞ்சும் அட்டைகளும்
வெறும் கூடைகளும்
துளிர்த்திருக்கும் கொழுந்துகளும்
அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும்

உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன்
கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன்
மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் 
புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண்

ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் 
புதைக்கப்பட அதன்மீதேறி 
கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று

எவ்வளவெனிலும் சம்பளம் 
எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு
மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை

ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள்
வெளியில் வர முடியாதிருந்தவர்கள் 
ஒரு நாள் மலைகள் தம்மீது சரியுமென நினைத்திருக்கவுமில்லை

வாக்குரிமையோடு நாடற்றிருப்பவர்களின் 
கண்ணீரின்மீதும் சிதையின்மீதும்
மீண்டும் மீண்டும் தேயிலைச்செடிகளை நாடும்
மலைத் தேசத்தில் சரிந்த மண்ணில்
புதையுண்ட குழந்தையைத் தேடிப் பிதற்றும் தாயொருத்தியின்
சாபத்தை கேட்டு பதிலற்றுக் கிடக்கிறது
ஊரை விழுங்கிய மலை.

அம்மதான் ஒழித்து விளையாடுகிறாள் எனில்
வீடும் ஊரும் தெருவும் தேயிலை மலையும் 
ஒளித்து விளையாடுமா?
மாபெரும் கேள்வியோடிருக்கும் குழந்தை 
அழத் தொடங்கும்போது
இந்த மலை என்ன பதில் சொல்லும்?

யார் யாரோ மலைகளைத் தின்றனர்
மலைகளோ தம்மை நம்பியிருந்த
சனங்களைத் தின்றன.
0

தீபச்செல்வன்

நவம்பர் 2014

நன்றி - கரை எழில், குளோபல் தமிழ். 

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...