Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 3 அக்டோபர், 2015

துடைக்க முடியாத குருதி


மிக மிக எளிதாக சிந்தவைக்
கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி

யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர்
வாழ்பவர்களின் குருதியையும்

மாபெரும் சவக்கிடங்கைமூடும்
மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும்
உதவிக்கு
மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள்

வெடிலடிக்கும் கொடிகளோடு
எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில்
பேரம் பேசும் கொலையாளிகள்
இடைவேளையில் அருந்தினர்
ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்
கொன்று தின்றவனே
தன் வாயினை துடைக்கட்டுமென

பூமியெங்கும்
நீங்க மறுக்கும் குருதிக்கறைகள்

அது அவ்வளவு எளிதல்ல

மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல
மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி

எளிதாக மறைக்கப்பட்ட
ஒன்றரை லட்சம் உடல்களைப்போல
நசிக்கிப் புதைக்க முடியவில்லை
அழிக்கப்பட்டவர்களின் குரல்களை

தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்

2 கருத்துகள்:

முகை ஒளி தாசன் சொன்னது…

எமது மக்களின் அழிக்க இயலாத இரத்த சுவடுகளுக்கு அறமற்ற இந்த உலக சமூகம் கட்டாயம் பதிலிருத்தே ஆக வேண்டும். அதுவரை பூமியே, என் இரத்தத்தை மூடிப் போடாதே, என் அலறலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. யோபு (16:18) பரிசுத்த வேதாகமம்.

முகை ஒளி தாசன் சொன்னது…

எமது மக்களின் அழிக்க இயலாத இரத்த சுவடுகளுக்கு அறமற்ற இந்த உலக சமூகம் கட்டாயம் பதிலிருத்தே ஆக வேண்டும். அதுவரை பூமியே, என் இரத்தத்தை மூடிப் போடாதே, என் அலறலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. யோபு (16:18) பரிசுத்த வேதாகமம்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...