Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 19 அக்டோபர், 2015

தலைவியை இழந்த வானம்


போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென
எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி

பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு
கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை
இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு
தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி

வீரக் கதைகளில் சீருடைகளுடன்
இன்னும் உலவும் தலைவியின்
மௌனத்திலும்
இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது
மாபெரும் நெருப்பு

வாதையின் பிணியே சூழ்ச்சியாய்
தன் புதல்வியை தின்றதென
புலம்புகிறாள் தாயொருத்தி
நெஞ்சில் மூண்ட காலத் தீயே
தன் தலைவியை உருக்கியதென
துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி

மௌனமாகவும்
சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த
தலைவியையும் இழந்தோம்

பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை
தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம்
ஊழித் தாண்டவத்தில் அழித்தனர் லட்சம்பேரை
எஞ்சியோரை மாண்டுபோகும்படி செய்தனர்

இனி?

ஊழியின் ஈற்றில் சரணடையும் தன் சேனைக்கு
தலைவி கூறியது இப்படித்தான்
'இத்துடன், எதுவும் முடிந்துவிடவில்லை'

தீபச்செல்வன்

தமிழினி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் பிரிவுத் தலைவி. 1991இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 19ஆவது வயதில் இணைந்த அவர் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் வவுனியா முகாமில் வைத்து கைது செய்யப்பட்டார். நான்கு வருட தடுப்புக் காவலின் பின்னர் 2013இல் புனர்வாழ்வு வழங்கப்பட்டதாக ககுரி விடுவிக்கப்பட்ட தமிழினி 2015 அக்டோபர் 18 புற்றுநோய் காரணமாக காலமானார். 

1 கருத்துகள்:

மணவை சொன்னது…

அன்புள்ள அய்யா,

வணக்கம். எனது வலைத்தளம்: மணவை

என்னுடைய வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகிறேன்.

வலைத்தள முகவரி: manavaijamestamilpandit.blogspot.com
இமெயில் முகவரி: manavaijamestamilpandit@gmail.com

நன்றி.

-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...