Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 19 பிப்ரவரி, 2015

கிளிகளற்ற நகரம்


மயானம் ஒன்றைப்போலிருக்கும்
இந்த நகரில்
அன்று தனிமையிருக்கவில்லை

வர்ணமிகு இரவு விளக்குகள் பூட்டப்படவில்லை
வீதி அகலமாக்கப்படவில்லை

எண்ணற்ற விளக்குகள் எரியவிடப்பட்டபோதும்
நகரத்தை முடியிருக்கும்
இந்த கொடு இருள் அன்றிருக்கவில்லை

அந்நிய மொழியில் எழுதுவும் எழுதப்படவில்லை
ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் குடியேறவுமில்லை

மரண வீடு ஒன்றைப்போல
கடாசிப்பூமரங்கள் நாட்டப்பட்டிருக்கவில்லை
எந்த பேயும் உரைநிகழ்த்தவில்லை
கொலையாளிகளின் படங்களெதும் தொங்கவில்லை

இப்படித் தனியே அலையுமொருவனைப்
பார்த்திருக்க முடியாது
எங்கு சென்றனர் என் சனங்கள்?

இப்படித் தனித்திருந்து
ஒரு கவிதையை எழுத நேரிடுமென
நினைத்திருக்கவுமில்லை

ஏதோ இருந்தது
நாமிருக்கவும்
சிரித்திருக்கவும்

அன்று நாமிருந்தோம்
நான் மகிழ்ந்திருந்தேன்
இங்கு உன்னத வீரர்கள் எம்மை சூழ்ந்திருந்தனர்
எங்கள் நகரம் எங்களுக்காயிருந்தது

இன்று, காணவில்லை ஒரு கிளியையும்

2014

தீபச்செல்வன்

நன்றி: ஜீவநதி (ஈழக் கவிதை சிறப்பிதழ்)

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...