Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 9 ஆகஸ்ட், 2014

திருக்கேதீச்சரம்



பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம்
கொன்று மறைக்கபட்டவர்
எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட
மாபெரும் சவக்குழியை

உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள்
எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச்
சொல்பவனின் பல்லிடுக்குகளில்
சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள்

உறக்கமற்ற மரணத்தோடு
மாபெரும் வதையோடு
சரிந்துபோய்க் கிடப்பவர்கள்
உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை
நான் கண்டேன்

ஆ.. எனப் பிளந்த வாய்கள்
உடலுக்குக் குறுக்காய் கைகள்
தலைகள் திரும்பித் திரும்பி யாரைத் தேடின?
எலும்பாய் கிடக்கும் அச்சிறுவன்
என்ன குற்றமிழைத்திருப்பான்?

ஏன் எங்களைக் கொன்றீர்களெனும்
இறுதிவாக்குமூலங்கள்
இன்னமும் முனக
குற்றங்கள் நிறைந்த இரத்தத்தில்
நனைந்துபோனது திருக்கேதீஸ்வரத் தேவாரங்கள்

எல்லாமும் கொல்லப்படும் தேசத்தில்
எங்கும் சவக்குழிகள்
எங்கும் எலும்புக்கூடுகள்
கொல்லப்படமுடியாத வாக்குமூலங்களுடன்
அலைகின்றன மண்ணுக்கு அடியில்

மண்ணுக்குளிருந்து எழும்பி வருகின்றன
எலும்புக்கூடுகள்
யாருக்கும் புரியும் மொழியோடு

திருக்கேதீச்சரத்தானே நீயேனும்
எமக்காய் வந்தொரு சாட்சி சொல்லு!

0

தீபச்செல்வன்

2014 பெப்ருவரி

நன்றி: கணையாழி, ஞானம், குளோபல் தமிழ் நியூஸ்

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...