Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 19 ஜூன், 2014

உனக்காக கொந்தளிப்பேன்


நேற்று எனது ஊரையும்
இன்று உனது ஊரையும்
அழிக்க எங்கிருந்து புறப்பட்டனர்?
நண்பனே, சிதைக்கப்பட்ட கிராமம் ஒன்றிலிருந்து
உனக்காய் குரல் கொடுக்கும்
நானறிவேன் இழப்புகளின் வலியை

நேற்று எனது வீட்டையும்
இன்று உனது வீட்டையும் உடைப்பது ஏன்?
இடிபாடடைந்த வீடொன்றிலிருந்து
உனக்காய் அவதியுறும்
நானறிவேன் வீடற்ற பொழுதுகளை

நேற்று என்மீது குண்டுகளும்
இன்று உன்மீது வாள்களும் வீசுகின்றவர் யார்?
ஆறாத காயங்களோடு
உனக்காய் துடிக்கும் நானறிவேன்
காயங்களின் நிணத்தை

என் கோவில்களையும்
உன் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்?
கடவுள்களையும் கொலை செய்யும் நிலத்திலிருந்து
உனக்காய் பிரார்த்திக்கும் நானறிவேன்
கைவிடப்படுதலின் துயரத்தை

என்னிடம் தொப்பி இல்லை
நீயோ திருநீறு அணித்திருக்கவில்லை
ஆனாலும் நமது இரத்தம் உறிஞ்சப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
உறிஞ்சப்படும் குருதி வேறுவேறல்ல

என் சகோதரிகள் பர்தா அணிந்திருக்கவில்லை
உன் சகோதரிகளோ கூந்தலில்
பூச் சொருகியிருக்கவில்லை
ஆனாலும் நமது கண்ணீர் அருந்தப்படுகிறது
வெறியோடு அலையும் விலங்குகளின் கண்களுக்கு
நீயும் நானும் வேறுவேறல்ல

நண்பனே உன் கண்ணீரைத் துடைத்து
உனக்காக கொந்தளிக்கும்
நானறிவேன் ஒடுக்குமுறையின் குரூரத்தை.

0

தீபச்செல்வன்
18.06.2014

நன்றி: தீராநதி, குளோபல் தமிழ் செய்திகள்

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

உங்களது இதயக்கணத்தால் எழுந்த கவிதைக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். மதத்த்தால், மொழியால், நிறத்தால். சாதியத்தால் வேறுபட்டு இரத்த்தம் சிந்த முனைந்த சமூகங்ககளை கவிதைகள் நெறிப்படுத்தியுள்ளன. அதற்கு ஒரு உதாரணம் இது. கலீல் ஜிப்ரான் காலமது. இரண்டு சமூகங்கள் அன்று பொருந்திக்கொண்டன. இஸ்லாத்தின் பெயரால் ஜிஹாத் , கிறிஸ்துவத்தின் பெயரால் புனிதப்போர் என்ற சித்தாந்தம் அன்று லெபனானில் இரத்தம் சிந்தக் காரணமாயிற்று. அப்போது ஒரு குரல் ஜிப்ராஜிடமிருந்து "எழுத்தில் எழுதப்பட்ட உயிரற்ற சட்டங்களுக்காக உயிருள்ளவர்களை கொன்று குவித்துக்கொண்டிருகின்றீர்கள். இறந்து போன மகான்களுக்காக இருப்பவர்களை அழித்துக்கொண்டிருக்கின்றீர்கள்" என்ற இரண்டு வரிக்கவிதைகள் .சமூகங்களை கைகோர்க்க வைத்துள்ளன. இதுதான் இன்றயா காலத்தின் தேவையுமாகும். அதை நீங்கள் இப்பொழுது செய்கிறீர்கள். உங்களது இதுபோன்ற காத்திரமான கவிதைகள் அதிகம் வரவேடும். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக மாத்திரம் இல்லாது. எம்மை ஒன்றிணைக்கும் பணியையும் செய்யவேண்டுமென பிராத்தித்து விடைபெறுகின்றேன்.

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...