Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 18 மே, 2014

ஆட்களை இழந்த வெளி


வானம் நேற்றுக் காலைவரை
உறைந்திருந்தது
இப்பொழுது சிதறி
கொட்டிக்கொண்டிருக்கிறது
வானம் அழுகிறதென யாரோ
சொல்லிக்கொண்டு போகிறார்கள்
இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர்
குடி எரிந்து முடிகிறது.

ஹெலிஹொப்டர்கள் அலைந்து
கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது
எரிந்த வாகனங்களை
மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா
எல்லாம் நசிந்துபோக
அடங்கிக் கிடக்கிறது
ஆட்களை இழந்த வெளி.

கைப்பற்றப்பட்டவர்களாக
குழந்தைகளை தொலைக் காட்சிகள்
நாள் முழுவதும்
தின்று கொண்டிருந்தன
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

நந்திக்கடலில்
பறவை விழுந்து மிதக்கிறது
பறவைதான் சனங்களை தின்றது
என்றனர் படைகள்
நந்திக்கடல்
உனது கழுத்தை நனைத்து
அழைத்துக்கொண்டு போயிருக்கிறது

உடைந்த ஆட்கள் குழிகளில்
நிரப்பட்டனா்
ஆடகளற்ற வெளி கரைந்து உருகுகிறது
மாடு காகத்தை சுமந்து
வீழ்ந்து கிடக்கிறது
அந்தச் சிறு கூடுகள் நிலத்தை
பிரித்து சிதறின.

இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை
பெரு மழை பெய்கிறது
எனினும் நந்திக்கடல் காய்ந்து போகிறது.

வானம் உருகிக்கொட்டியபடியிருக்க
மிருகம் ஒன்று
சூரியனை தின்று கொண்டிருக்கிறது
யாருமற்ற நிலத்தில்
தப்பிய ஒற்றை ஆட்காட்டிப் பறவை கத்துகிறது.

o தீபச்செல்வன்

18.05.2009

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...