Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

சனி, 9 மார்ச், 2013

இரும்புக்காட்டின் பூக்கள்



வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க
சக்கரங்களும் இல்லை
ஓட்டமும் இல்லை
துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த
யாருமற்ற இடுகாட்டில்
பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச்
சுமக்கின்றனர் சிறுவர்கள்

இரும்பு படிந்த உடல்களிலிருந்து
உதிர்கிறது துருவேறிய துகள்கள்
மலிவான சிறுவர்கள் 
எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென
விலைக்கு வாங்கப்பட்டனர்
வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் 
இரும்பை கொண்டு வருவார்களென
இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர்

அழுகிய இரும்பை நெறுக்கும்
தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம்
இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள்

கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும்
வெடிகுண்டுகள் நிறைந்திருக்க
சிறுவர்கள் உள் நுழையும்பொழுது
இரும்புக்காட்டில் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்துக்கொண்டு 
உக்கிய பேரூந்தையும்
உருட்டிச் செல்லுகின்றனர் யாரோ!

தீபச்செல்வன்

நன்றி: கல்கி

புதன், 6 மார்ச், 2013

மெரீனாக்கரை




மெரீனாவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க் கோப்பையுடன் எதிர்பார்த்திருக்கும் அம்மாவை 
பெயர்ச்சியால் கவிந்த வானம் இருண்டுபோக
புலம் இழந்த பறவைகள் அலைகின்றன
நேற்றும் ஊரிலிருந்து சில நண்பர்கள் 
படகெடுத்து பெருங்கடலின் வழியே சென்றனர்

எனது நகரத்தின் மரநிழலில் நடப்பதுபோலவும்
எனது தெருவில் சைக்கிளை ஓட்டுவதுபோலவும் 
எதுவுமில்லை 
யாருக்கும் புரியாத பேச்சோடு
எதிரில் யாருமற்றிருந்தேன் 
வெடிப்பதுபோல ஊதும் இருதயம் முழுவதும் தாய்மண். 
கனவுகள் காய்க்கும் பனைமரக்காட்டிலிருந்து 
வேர் அறுத்த மரமாய்
சென்னை நகரத்திற்குத் தூக்கி எரிந்தது யார்?
மண்ணிழந்து வாடத் தொடங்கிற்று செடி
தாய் மண்ணைப் பிரிய
தேம்ஸ் கரைபோல இலையுதிர்காலத்தில் 
அசைவற்று இருக்கிறது மெரீனாக்கரை
காற்று எங்கோ இழுத்துச் செல்லுகிறது பறவைகளை
நள்ளிரவில் கண் விழிக்கச் செய்யும்படி
மெரீனாவுக்கு மேலால் தாழ இறங்கி 
கத்திச் செல்கின்றன சில வலசைப் பறவைகள்! 

தீபச்செல்வன் 

நன்றி: தீராநதி மார்ச் 2013

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...