Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 3 அக்டோபர், 2013

எனது குழந்தை பயங்கரவாதி


தமது துப்பாக்கிகளிலிருந்து சமாதானம் பூக்கிறதென
அவன் சொல்லும்போது
சமாதானம் எப்படியிருக்கும் என 
நான் கேட்கவில்லை

தமது கண்களிலிருந்து பாதுகாப்பு பிறக்கிறதென
அவன் சொல்லும்போது
பாதுகாப்பை எப்படி உணர்வதென 
நான் கேட்கவில்லை

எமது நிலத்தை தாம் ஆக்கிரமிக்கவில்லையென
அவன் சொல்லும்போது 
புத்தர்சிலைகளும் இராணுவமுகாங்களும் எப்படியானவையென 
நான் கேட்கவில்லை

நாம் அனைவரும் ஒருநாட்டுப் பிரஜைகளென
அவன் சொல்லும்பொழுது 
சகோதரர்களை நீ எப்படி நடத்துவாய் என 
நான் கேட்கவில்லை

யாரும் காணாமல் போகவில்லையென 
அவன் சொல்லும் பொழுது
சரணடைந்தவர்கள் எங்கு சென்றனரென
நான் கேட்கவில்லை

எமது பெண்கள் எவரையும் 
வன்புணர்ந்து கொல்லவில்லையெனவும்
இளைஞர்கள் எவரையும் 
நிர்வாணமாக இருத்தி பின் பக்கமாக 
தலைகளில் சுடவில்லையெனவும் 
அவன் சொல்லும்பொழுது 
அந்த நிலத்தில் குருதி எப்படி கொட்டியதென  
நான் கேட்கவில்லை

யாரையும் தாம் கொல்லவில்லையெனவும்
கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளெனவும்
அவன் சொல்லும் பொழுது 
நான் சொன்னோன்
எனது குழந்தை ஒரு பயங்கரவாதியென.

தீபச்செல்வன்

நன்றி: தீராநதி அக்டோபர் 2013

4 கருத்துகள்:

geetha சொன்னது…

great

தமிழநம்பி சொன்னது…

இயன்றவரை அயற்சொற்களை நீக்கி எழுதுங்கள். இது தமிழ்மொழி காப்பிற்கான அன்பு வேண்டுகோள். அவ்வளவே!

saravanan சொன்னது…

உங்கள் கவிதை என்னை மிகவும் பாதித்தது.
அடக்குமுறை உள்ளவரை விடுதலை போர்
தொடர்ந்தே தீரும்.

உங்கள் கவிதை அதற்கு கலங்கரை விளக்கமாக
தென்படுகிறது.

உங்கள் இலக்கிய சமூக பணி தொடர வாழ்த்துகள்.

webstar சொன்னது…

இவை எல்லாம் ஏன் நடக்கின்றன. என அந்த பிள்ளைகள்
கேட்கும் போது
எம்கண்கள் கலங்குகின்றன.????

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...