Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

செவ்வாய், 7 மே, 2013

ஓரிடம்



தேடப்பட்டவனைக் காணவில்லையென 
கேட்டுக் கொண்டே செல்பவர்
நேற்று முழுவதும் கதவை பூட்டியிருந்தார்

வாடகைக்கு தங்கியிருந்த
ஒரு கவிஞனிடம் வார்த்தைகள் மட்டுமேயிருந்தன

ஓரிரவில் பூட்டப்பட்ட கடையின் முன்பாக
நாய்கள் சலம் கழிக்குமிடத்தில்
உறங்கவிருக்கும் மனிதனுடன் பேசிக்கொண்டே
ஒரு இரவை முடித்திருக்கும் சில நேரங்களில்
குழந்தையைப்போல அழுதுகொண்டே நடக்கையில்
யாருமில்லை

வார்த்தைகளுக்காய்த் தண்டிக்கப்படும் ஒரு கவிஞன்
திறக்கப்படாத கதவுகளைத் தட்டுகையில்
வைக்க இடமற்றிருக்கும் பொருட்களைவிடவும்
மிகப் பாரமாயிருந்தது இதயம்

அழைக்க விரும்பாத நண்பர்கள்
வெளியேறிச் செல்லும்பொழுது
பார்த்துக் கொண்டே நின்றனர்
விடைபெறும்பொழுது
யாதொரு கையும் அசைத்தனுப்பவில்லை

குடியேறிச் சில நாட்களிலேயே
வெளியேறச்சொல்லும் பொழுது
ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்கக்கூடாதவன்
என்று வாசலில் வெளியேற்றக் காத்திருக்கும்
யாரோ ஒரு அம்மா
தன் பிள்ளையைப் போலவும் நினைக்கவில்லை

சூரியன் உதித்திராத அதிகாலையில்
கையில் கிடைத்த பொருட்களுடன்
பூமியில் ஓரிடம் தேடி
யாருமற்றவனாய்
நகரத்தைவிட்டுப் பெயர்ந்து செல்லும்பொழுது
எதிரில் யாதொரு வண்டியுமில்லை

ஒரு கவிஞன் நாட்டைவிட்டுத் தப்பியோடினான்!

தீபச்செல்வன்

கணையாழி மே 

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...