Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இருக்கப் பிரியப்படும் இடம்


குளத்தின் மேலாக வட்டமிடும் பறவைகள் இல்லை
துப்பாக்கிகள் தொங்கும் மருதமரங்களின் கீழாக
பேசிக் கொண்டிருக்க யாருமில்லை
ஆஷா! நாங்கள் எங்கு செல்வோம்?

இரவில் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி
பேசிக் கொண்டு நடந்து வரும் பொழுது
நான் துப்பாக்கிகளில் மோதுண்டேன்
ஒரு தெரு எப்படியிருக்கும்?

கால்களறியாத தெருக்களில் ஏதோ விளைய
அழிவின் நிழலில்
அழகிய தோட்டத்தைக் காண்பீர்கள் என்று
நாம் வாழும் காலத்தைச் சபித்தது யார்?

உண்ணிப் பூக்கள் ப+த்திருக்க
பச்சைப் பாம்புகள் ஈச்சைகளுக்குள் புணர
கைகளுக்குள் சிக்காத காணாங்கோழிகள்
பற்றைகளுக்குள் இருந்து மிரண்டபடி பார்க்க
நீயும் நானும் ஆற்றங்கரையிலிருப்போமா?

ஆஷா! இரத்தம் பட்டு வறண்ட கன்னங்களுக்கு
இனிக்கும் உனது முத்தம் வேண்டும்
என்னோடு நீயும் இருக்கப் பிரியப்படும் இடத்தை
நான் எப்படி இழப்பேன்?

முத்தங்கள் பூத்த கொடிகள்; படரும்
நாவல் மரத்தில் நீ பழங்களைப் பறிப்பாய்
நான் கிளைகளை வளைப்பேன்
பழங்களை உண்ண பறவைகள் திரும்பும்.

நன்றி : தீராநதி ஜனவரி 2013 

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...