Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

புதன், 28 நவம்பர், 2012

விளக்கெரியும் பொழுது


எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா 
நள்ளிரவுகளின் காலத்தில்
இருண்ட தேசத்தில்
சூரியனுக்காய் காத்திருக்க
சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க 
கைகளால் மூட முடியாத 
மழை இடியோடு பெய்கிறது.

வீழும் பொழுது அழுது
மீளும் பொழுது தொழுது
கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில்
தாய்மார்களின் அடி வயிறுகளில் 
கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன.

வீட்டு மூலையில் விளக்கெரியும் 
கார்த்திகை மாலைப் பொழுதில்
விளக்குகளை தூக்கி வந்து
மழையில் நீர் சொட்டும்
தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் 
உங்கள் முகங்கள் கண்போம்

மூட முடியா மழை
கொல்ல முடியா மரங்களில் பெய்ய
அழியா முகங்கள் மனங்களில் தெரியும்
அணைக்க முடியா விளக்குகள் 
தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது.

*    *    * 

தீபச்செல்வன்

நன்றி - வானவில், தீராநதி ஜனவரி 2013

சனி, 17 நவம்பர், 2012

குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம்



இங்கும் ஒரு தாயின் அழுகைதான்
நகரத்தை உலுப்புகிறது
குழந்தைகள்தான்
பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர்.

பேரீட்சைமரங்களின் கீழே
பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை
தேடுகின்றதை நான் கண்டேன்.

எனது அம்மாவே நீ எங்கும்
குருதி சிந்துகிறாய்
நமக்காய் குழிகளைக்கூட
வழங்க பிடிக்காத அதிகாரத்திடம்
குழந்தகைள் திரிகிற
நகரம் பலியிடப்படுகிறது.

காஸா எல்லைகளில்
இலங்கைப்படைகள் மோத வருகின்றன
கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள்
முற்றுகையிடுகின்றன.

குழந்தைகள் என்ன செய்தார்கள்?

நமது குழிகளில் கிடக்கிற
குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள்
மேலும் மேலுமாய்
சனங்கள் தோற்றுப்போக
அதிகாரத்தை கடக்க இயலாதிருக்கிறது?

அந்த நகரமும்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது
குழந்தைகள்தான் உலகத்திடம்
பலிவாங்கப்படுகிறார்கள்
தாய்கள்தான் விலைகொடுக்கிறார்கள்.

சிதைந்த சுவர்களினிடையில்
இன்னும் நுழைய
காத்திருக்கும் விமானம்
எனக்கு மேலால் அலைந்து திரிகிறது.

விழப்போகிற குண்டுகளிடமிருந்து
தப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்
குழியிலிடப்படுகிற நகரத்தில்
நானும் நசிந்து கிடக்க
காயங்களால் நீ அழுகிறாய்.

பாலஸ்தீனக் குழந்தைகளை
பலியிட அலைகிற
இலங்கை இராணுவத்தளபதி
வழிநடத்துவிக்கிற
காஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.

நகரத்துள் படைகள்
நுழைந்து குழந்தைகளை தேடுகிறபோது
நமது நகரத்தின்
அதே அழுகை ஒலி கேட்கிறது.

நெருப்புப்பிடித்து எரிகிற நகரத்தில்
அதன் புகையிடையில் நமது முகங்கள்
கிடந்து கறுப்பாகின்றன.

விமானங்கள் நகரத்தை
முழுமையாய் தின்று களிக்க
சாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்
நமது நகரத்தின் அதே
குருதிச்சொற்கள்தான் இருக்கின்றன.

01.01.2009

தீபச்செல்வன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...